செய்திகள்

மோடி குறித்து பாகிஸ்தான் ராணுவ வீரர் சூளுரை: வைரலாகும் வீடியோ

இஸ்லாமாபாத், டிச. 06– மோடி குறித்து பாகிஸ்தான் ராணுவ வீரர் அடாவடியாக சூளுரைக்கும் வீடியோ வைரலாகி உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் எல்லை பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி வருவதாக இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதனையடுத்து காஷ்மீரில் அவ்வப்போது இந்திய ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது. வைரல் வீடியோ இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கும், […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மழைநீர் சேமிப்பை உறுதி செய்தார் ஜெயலலிதா; சுரங்க மழை நீர் வழி கண்டு சென்னை மாநகரம் பலனடைய களம் இறங்குவாரா ஸ்டாலின்?

ஆர். முத்துக்குமார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள்– டிசம்பர் 5–ம் தேதி, தமிழகமெங்கும் அஞ்சலி செலுத்தும் தினமாக இருந்த நிலையில் தமிழகத்தின் தலைநகர் சென்னை, டிசம்பர் 4 அன்று பெய்த வரலாறு காணாத மழைப் பொழிவின் பின்விளைவுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. ஒருமுறை ஜெயலலிதா கடுமையான வறட்சியை தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கையில் ஓரு பத்திரிகையாளர் அது பற்றி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போது, சிறு நகைப்புடன் கூறிய ஓர் சொற்தொடர், ‘எனக்குத் தண்ணி ராசி உண்டு’ […]

Loading

செய்திகள் வாழ்வியல்

வெறும் 5 பைசா செலவில் ஒரு கிமீ பயணம் செய்யும் மின்சார மொபட்

இந்திய ஐஐடி மாணவர்களின் கண்டுபிடிப்பு! வெறும் 5 பைசா செலவில் ஒரு கிமீ பயணத்தை மேற்கொள்ளும் வகையிலான மின் வாகனங்களை ஐதராபாத் ஐஐடி மாணவர்கள் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐஐடி ஐதராபாத் பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ப்யூர் எனர்ஜி நிறுவனம் ‘பியூர் இவி’ என்ற பெயரில் மின் வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றது. இந்த பியூர் இவி நீடித்து உழைக்கும் மற்றும் அதீத திறனை வெளிப்படுத்தும் இரண்டு சக்கர மின் வாகனங்களை இந்தியச் சாலைகளுக்கு அறிமுகம் […]

Loading

செய்திகள்

‘மிக்ஜம்’ புயல் ஆந்திராவில் கரையை கடந்தது

அமராவதி, டிச.6- சென்னையை புரட்டிப்போட்ட ‘மிக்ஜம்’ புயல் ஆந்திராவில் நேற்று பகலில் கரையை கடந்தது. வங்கக்கடலில் கடந்த 27-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ என பெயரிடப்பட்ட இந்த புயல் மெல்ல மெல்ல கரையை நோக்கி நகர்ந்தது. இந்த புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பேய்மழை கொட்டியது. குறிப்பாக இந்த புயல் சென்னையை ஒட்டிய வட கடலோர பகுதிகளில் வளைந்து கடந்து சென்றதால் அதன் […]

Loading

செய்திகள்

2014ம் ஆண்டுக்கு பிறகு மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 82 சதவீதம் உயர்வு

புதுடெல்லி, டிச.6- 2014ம் ஆண்டுக்கு பிறகு, மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 82 சதவீதம் அதிகரித்து இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் கூறினார். நாடாளுமன்ற மாநிலங்களவை கேள்வி நேரத்தின்போது, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் கூறியதாவது:- கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு, நாட்டில் மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 82 சதவீதம் அதிகரித்துள்ளது. எம்.பி.பி.எஸ். சீட்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்து 348-ல் இருந்து 1 லட்சத்து 8 ஆயிரத்து 940 ஆக அதிகரித்துள்ளது. இது, 112 […]

Loading

செய்திகள்

சென்னையில் நடைபெற இருந்த ‘பார்முலா-–4’ கார் பந்தயம் தள்ளிவைப்பு

தமிழ்நாடு அரசு அறிவிப்பு சென்னை, டிச.6- சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள சாலைகளில் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் சென்னை ‘பார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட்’ பந்தயம் என்ற ‘பார்முலா-4’ கார் பந்தயத்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த கார் பந்தயத்திற்கு தமிழக அரசு ரூ.40 கோடி தொகையை ஒதுக்கியுள்ளது. இந்தநிலையில் இந்த பந்தயத்தை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மைதானத்தில் நடத்த வேண்டும் என்றும் சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள சாலைகளில் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கேட்டும் சென்னை […]

Loading

செய்திகள்

‘வெள்ள நிவாரண பணிகளை நேரடியாக கண்காணிக்கிறேன்: ஸ்டாலின் சமூக வலைதளப்பதிவு

சென்னை, டிச. 6- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- அனைத்து இடங்களிலும் நீர் வடிந்து, இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்பட்டாலும், அதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் பணியாளர்கள், அனைத்து அரசு உயர் அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன். இந்த பணிகள் அனைத்தையும் நானே நேரடியாகக் கண்காணித்து வருகின்றேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில் அனைவரும் இணைந்து பணியாற்றி இந்த இயற்கை இடர்ச்சூழலை வென்று வருவோம். இவ்வாறு […]

Loading

செய்திகள்

தமிழகம் முழுவதும் தயார் நிலையில் மின்கம்பங்கள், 15,000 கி.மீ. மின் கம்பிகள், 15,000 களப்பணியாளர்கள்

அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் சென்னை, டிச.3– சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள 110/11 கி.வோ. வள்ளுவர்கோட்டம் துணை மின் நிலையத்தில் உள்ள 16 எம்.வி.ஏ. உயரழுத்த மின்மாற்றியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பழுது நீக்கும் பணியிணை மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். கனமழை மிகப் பெரும் கனமழையாக இருந்தாலும் சரி, புயலாக நம்மைக் கடந்து சென்றாலும் அதனை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் 3 லட்சம் மின் கம்பங்கள், 15,000 கி.மீ. மின் கம்பிகள் மற்றும் […]

Loading

செய்திகள்

பாலஸ்தீனியர்கள் அதிகம் வசிக்கும் தெற்கு காசா மீது இஸ்ரேல் தாக்குதல்

காசா, டிச. 03– பாலஸ்தீன மக்கள் அதிகளவில் இடம்பெயர்ந்து வசிக்கும் தெற்குக் காசா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது. தெற்குக் காஸாவின் சுற்று வட்டாரங்களில் மக்களை இடம்பெயர எச்சரித்து துண்டு பிரசுரங்களை இஸ்ரேல் ராணுவம் நேற்று வீசியுள்ளது. இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா உள்ளிட்ட பிராந்திய நாடுகள் காசாவில் வாழும் பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்த போதும் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. 15 ஆயிரம் பேர் பலி 7 வாரங்களாகத் […]

Loading

செய்திகள்

இந்தியாவில் 71 பேருக்கு தொற்று; தமிழ்நாட்டில் 7 பேருக்கு கொரோனா

டெல்லி, டிச. 03– இந்தியாவில் புதிதாக 76 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 442 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 159 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,02,179 […]

Loading