சினிமா செய்திகள்

பெண்களுக்கு தற்காப்புக் கலை அவசியம்: ‘வேம்பு’ பட மெசேஜ்!

சென்னை, மே 28– பாலியல் வன்கொடுமையைத் தடுக்க வேண்டுமா…? ஒவ்வொரு இளம்பெண்ணும், சிறுமியாக படிக்கிற காலத்தில் ஒன்று அவர்களுக்குப் பள்ளியில் தற்காப்பு கலையைக் (கராத்தே -சிலம்பு) கற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையா… தனியார் அமைப்பின் மூலம் தனியாக பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது, இன்றைய காலத்தின் கட்டாயம்- என்பதை அறிமுக இயக்குனர் ஜஸ்டின் பிரபு அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார். படம் : ‘வேம்பு’. பொழுதுபோக்குக்காக எடுக்கும் ஒரு படம், […]

Loading

சினிமா செய்திகள்

ரூபாய் 150 கட்டணத்தில் மலேசிய சுற்றுலா, ஜாலி!

ரூபாய் 150 கட்டணத்தில் (அதிகபட்சம்) அழகு மலேசியாவின் முக்கிய சுற்றுலாத்தலங்களை, திரையரங்கில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே கண்டு வந்திருக்கும் பரம திருப்தியில் Ace. (கரண் ராவத்தின் கேமரா உபயம்) விஜய் சேதுபதி நாயகன். யோகி பாபு இணை நாயகன்( காமெடியன் என்று சொல்லக்கூடாது. விஜய் சேதுபதி நின்றால்… எழுந்தால்… நடந்தால்… படுத்தால்… ஓடினால்… அவரின்… நிழலாகவே விழுகிறாரே, அப்புறம்?!) காதலி ருக்மணி வசந்தியின் பணப் பிரச்சினையையும்- முன்பின் அறியா யோகி பாபுவின் காதலியின் பணப் பிரச்சினையையும் தீர்க்க […]

Loading

சினிமா செய்திகள்

சந்தானம் படத்தில் சர்ச்சையை கிளப்பிய பாடல் நீக்கம்

சென்னை, மே 15– சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘‘டிடி நெக்ஸ்ட் லெவல்’’ திரைப்படம் நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், அந்த படத்தில் திருப்பதி ஏழுமலையான் பாடலை கிண்டல் செய்யும் விதமாக கிஸ்ஸா பாடல் இடம்பெற்றதாக ஜனசேனா கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும், காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். திருப்பதி ஏழுமலையான் தொடர்பான பாடலை தவறாக சித்தரித்து உருவாக்கவில்லை என்றும் தானும் திருப்பதிக்கு அடிக்கடி செல்லும் பக்தன் தான் என சந்தானம் பேசியிருந்தார். ஆனால், பாடலை நீக்கவில்லை […]

Loading

சினிமா செய்திகள்

தமிழ் வில்லன் நடிகர் சம்பத்ராமுக்கு மலையாள சினிமாவில் விருது

சென்னை, மே 8– தமிழில் வளர்ந்து வரும் இளம் வில்லன் நடிகர் சம்பத்ராமுக்கு (வயது 54), மலையாளத்தில் சிறந்த வில்லன் நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரம் என்றாலும், முகமலர்ச்சியுடன் ஏற்று, சிரத்தையாக நடித்து, அனைவரின் பாராட்டுக்களைப் பெற்று வருபவர் இவர். தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து கொண்டிருப்பவர், பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்து பாராட்டுக்களைப் பெற்று வருபவர். தற்போது தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் மட்டுமல்ல […]

Loading

சினிமா செய்திகள்

கார் பார்க்கிங் தகராறு : நடிகர் தர்ஷன் வழக்கை ரத்து செய்த ஐகோர்ட்

சென்னை, ஏப். 30– கார் பார்க்கிங் தகராறு தொடர்பாக, நடிகர் தர்ஷன் மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியின் மகன் தரப்பிற்கும் சமரசம் ஏற்பட்டதால், இரு தரப்பினருக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். கார் பார்க்கிங் செய்வது தொடர்பாக, அவருக்கும், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியின் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் மற்றும் நீதிபதியின் மகன் காயமடைந்தனர். நண்பருடன் சேர்ந்து […]

Loading

சினிமா செய்திகள்

கனவு வாழ்விலிருந்து எழுப்பி விடுவார்களோ ? அஜித் குமார் அச்சம்

சென்னை, ஏப். 30– தனது கனவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பதாகவும் யாராவது இந்த கனவில் இருந்து எழுப்பி விடுவார்களோ என்ற அச்சம் இருப்பதாவும் பத்மபூஷன் விருது வென்றுள்ள நடிகர் அஜித் குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். திரைத்துறை மற்றும் சர்வதேச கார் பந்தயத்தில் சிறந்து விளங்கியதற்காக நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அஜித்துக்கு விருது வழங்கி கௌரவித்தார். இந்த நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகர் அஜித் குமார் […]

Loading

சினிமா செய்திகள் நாடும் நடப்பும்

நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷண் விருது:

ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார் புதுடெல்லி, ஏப்.29- நடிகர் அஜித்குமார் உட்பட, 71 பேருக்கு பத்ம விருதுகளை, டெல்லியில் நேற்று நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். கலை, அறிவியல், இலக்கியம், வர்த்தகம், மருத்துவம், சமூக சேவை போன்ற துறைகளில் சிறந்தவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு அடுத்த நிலையிலான இந்த உயரிய விருதுகள் இந்த ஆண்டுக்காக […]

Loading

சினிமா செய்திகள்

வீர தீர சூரன் படத்தை வெளியிட 4 வாரங்கள் இடைக்காலத் தடை

புதுடில்லி, மார்ச் 27– நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் படத்தை வெளியிட 4 வாரங்கள் இடைக்கால தடை விதித்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் வீர தீர சூரன். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை எச்.ஆர்., பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் பி4யூ என்டெர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மதுரை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் […]

Loading

சினிமா

சிறுகதை … சாமி படங்கள்..! …. ராஜா செல்லமுத்து

நகரின் பிரதான இடத்தில் ஒரு போட்டோ ஃபிரேம் கடை இருந்தது. அந்தக் கடை முழுவதும் சாமி படங்கள். போட்டோ ஃபிரேம் போட்டு வைத்திருந்தார் அழகிரி. விதவிதமான சாமி படங்கள் விதவிதமான வண்ணங்களில் அழகான சட்டங்கள், அடிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தன. இதுதான் விலை. இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்றில்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம் எதை வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். எந்தக் கடவுள் பிடிக்கிறதோ ?அந்தக் கடவுளை நீங்கள் எடுத்து செல்லலாம்” என்று அத்தனையும் ஃபிரேம் போட்டு அடுக்கி […]

Loading

சினிமா செய்திகள்

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக மேல்முறையீடு’ இயக்குனர் ஷங்கர் அறிவிப்பு

சென்னை, பிப்.22- தனது சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது அதிகார துஷ்பிரயோகம் என்றும், இந்த நடவடிக்கைக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்வேன் என்றும் இயக்குனர் ஷங்கர் அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ திரைப்படம் கதை விவகாரத்தில், எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அமலாக்கத்தறை விசாரணை நடத்தியது. இந்த நிலையில் இயக்குனர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்பிலான 3 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று முன்தினம் […]

Loading