குடிமைப் பணிகளுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பு, இளைஞர்களின் மிகப்பெரும் குறிக்கோளாகவும் கனவாகவும் இருக்கிறது. அந்தளவுக்கு உயர்ந்த பணியாக இருக்கும் இப்பணிக்குத் தேர்ச்சி பெறுவது அத்தனை எளிதானதல்ல. மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வும் திட்டமிடலும் இருந்தால்தான் இத்தேர்வில் தேர்ச்சி பெற முடியும். அந்த வகையில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபீனா, அண்மையில் குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சிபெற்று, குடும்பத்துக்கு பெருமை தேடித்தந்தது மட்டுமின்றி, குமரி மாவட்டத்தின் முதல் ஐபிஎஸ் அதிகாரியாக மாறி, கன்னியா குமரிக்கே பெருமையை சேர்த்து உள்ளார். அவர் […]