தலையங்கம் புயல் மழையில் மூழ்கி எழுந்து மூச்சு விட சிரமப்பட்டு கொண்டிருக்கும் சென்னை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பத் துவங்கி விட்டது. அருவி போல் சிறு ஓய்வின்றி தொடர்ந்து 35 மணி நேரத்தில் 43 சென்டிமீட்டர் மழைப் பொழிவு என்பது படுமோசமான இயற்கை சீற்றம்; அதன் பாதிப்பு நகர கட்டுமானத்தை சிதைத்திருப்பதில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. நெளிந்து இருக்கும் வாகனங்களின் முன்பகுதிகள், நாசமாகியிருக்கும் நிலத்தடி கட்டுமானங்கள், பெயர்ந்து போய்விட்ட சாலைகள், மூழ்கிவிட்ட நடைபாதை வர்த்தக நிறுவனங்கள், […]