சென்னை, ஏப்.25– மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் ஜூன் மாதம் தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கும் 9 ஆயிரம் முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக உறுப்பினர் ரா.ஈஸ்வரன் கோரிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– உறுப்பினர் ஈஸ்வரன், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய அந்தத் […]