செய்திகள் நாடும் நடப்பும்

ரஷ்யாவை வீழ்த்த நேட்டோ உறுதி, தொடரும் சிக்கல்களால் சரியும் ஐரோப்பிய பொருளாதாரம்

ஆர். முத்துக்குமார் அமெரிக்காவின் வழிகாட்டுதலில் நேட்டோ (NATO) ராணுவக் கூட்டணியின் சமீப நடவடிக்கைகள் அனைத்துமே ரஷ்யாவை வீழ்த்த வழி காண்பது மட்டுமே என்று தெரிகிறது. உக்ரைனில் அமைதியை நிலைநாட்டப் போகிறோம் என்றார்கள் அல்லவா? அதாவது உக்ரைனில் அமைதி திரும்ப நடவடிக்கைகள் என்ன எடுத்தார்கள்? அதைக் கேட்கும் அதிகாரம் ஐநா சபைக்கு நிச்சயம் இருக்கிறது. ஆனால் இதுவரை அமெரிக்காவின் கூட்டாளிகளான நேட்டோ நாடுகள் ரஷ்யாவை வீழ்த்த எடுத்து வரும் முயற்சிகள் உலக வரலாற்றை மாற்றியமைக்கும் நடப்புகளாக மாறி இருக்கிறது. […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் நேற்று 7 பேருக்கு கொரோனா

சென்னை, மே.31- தமிழ்நாட்டில் நேற்று 7 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 3 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் அடங்குவார்கள். சென்னை, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் மற்றும் வெளிநாட்டு பயணி ஒருவருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 13 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 73 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று கொரோனா தொற்றால் உயிரிழப்பு எதுவும் இல்லை. மேற்கண்ட தகவல் […]

Loading

செய்திகள்

பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், சீருடை : கல்வித்துறை உத்தரவு

சென்னை, மே.31- பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது. 2023–24ம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு, கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த திறப்பு தேதியை மாற்றி, வருகிற 7ந்தேதி 1 முதல் பிளஸ்–2 வகுப்பு வரையிலான மாணவ–மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. பள்ளிகள் திறப்புக்கு […]

Loading

செய்திகள்

மதிமுகவில் இருந்து விலகுகிறேன்: அவைத்தலைவர் துரைசாமி அறிவிப்பு

திருப்பூர், மே 30– மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார். திமுக உடன் மதிமுகவை இணைக்க வேண்டும் என்று கடந்த மாதம் வைகோவிற்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்திய திருப்பூர் துரைசாமி, இன்று கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மொத்தமாக விலகுவதாக அறிவித்துள்ளார். வைகோவுக்கு கடிதம் எழுதிய அவர், மதிமுக தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளாக உணர்ச்சிமிக்க அவரின் பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள் மேலும் […]

Loading

செய்திகள்

கம்பத்தில் அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சை பெற்றவர் பலி

கம்பம், மே 30– தேனி மாவட்டம் கம்பத்தில் அரிக்கொம்பன் யானை தாக்கி சிகிச்சை பெற்று வந்தவர் நேற்றிரவு உயிரிழந்தார். தேனி மாவட்டம் கம்பம் ஆசாரிமார் தெருவில் வசிப்பவர் பால்ராஜ் (வயது 65). இவர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் இரவு காவலராக வேலை பார்த்தார். கடந்த மே 27 ந்தேதி கம்பம் நகருக்குள் அரிசிக்கொம்பன் யானை புகுந்து நாட்டுக்கல், நந்தகோபாலன் கோயில் தெருக்களில் சுற்றி வந்தது. அப்போது பால்ராஜ் இரவு பணி முடிந்து இரு […]

Loading

செய்திகள்

சொத்துக்கள் முடக்கப்படவில்லை: உதயநிதி அறக்கட்டளை மறுப்பு

சென்னை, மே 30– அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்கள் எதுவும் முடக்கப்படவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பு, ஓட்டல் மற்றும் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வரும் லைகா நிறுவனம் மற்றும் கல்லல் குழும நிறுவனங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது. இதில் பெட்டிகோ கமர்ஷியோ இண்டர்நேஷனல் நிறுவனத்தின் […]

Loading

செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு இல்லை

சென்னை, மே.30- சென்னை மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் நேற்று 5 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 2 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 3 பேருக்கும், கிருஷ்ணகிரியில் ஒருவரும், கோவையில் ஒருவர் உள்பட மொத்தம் 3 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 7 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 79-ஆக உள்ளது. நேற்று தமிழ்நாட்டில் கொரோனா […]

Loading

செய்திகள்

நரிக்குறவர் சமூகத்தினருக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை, மே 30– நரிக்குறவர் சமூகத்தினருக்கு பழங்குடியினர் சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச் செயலர் க.லட்சுமி பிரியா வருவாய் நிர்வாக ஆணையருக்கு, அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- அட்டை வடிவிலான எம்பிசி சான்றிதழை ரத்து செய்துவிட்டு, பழங்குடியினர் (எஸ்.டி.) சாதிச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, புதிய இணையத் தொகுப்பை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுவரை சாதிச் சான்றிதழ் பெறாத புதிய விண்ணப்பதாரர்களுக்கு, பழங்குடியினர் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டு பாடத்திட்டத்திலிருந்து புதுச்சேரி மாநிலம் வெளியேறியது

புதுச்சேரி, மே 29– சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் இருந்து புதுச்சேரி மாநிலம் வெளியேறியது. புதுவைக்கு தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழ்நாட்டு பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது 1 முதல் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் இருந்து புதுச்சேரி மாநிலம் வெளியேறியது. வரும் கல்வியாண்டு முதல், ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையை […]

Loading

செய்திகள்

ரூ.2000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பான வழக்கு தள்ளுபடி: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

டெல்லி, மே 29– 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள எந்த ஆவணங்களும் தேவையில்லை என்ற ரிசர்வ் வங்கியின் அறிவுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெறப்படும் எனவும் அறிவித்துள்ளது. கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் […]

Loading