செய்திகள்

கேரள மாநில பார் கவுன்சிலில் வழக்கறிஞராக முதல் திருநங்கை

திருவனந்தபுரம், மார்ச் 21– கேரள மாநில பார் கவுன்சிலில், பத்ம லட்சுமி என்ற திருநங்கை, முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டுள்ளார். கேரள மாநில பார் கவுன்சிலில் அண்மையில் பதிவு செய்து கொண்ட 1500 பேரில், மாற்றுத்திறனாளி பெண்ணும் வழக்கறிஞருமான பத்ம லட்சுமி என்ற திருநங்கையும் ஒருவர். அவருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பத்ம லட்சுமிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு வாழ்த்து கூறியுள்ள கேரள சட்ட துறை அமைச்சர் பி […]

Loading

செய்திகள்

புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ. 1500 கோடி ஒதுக்கீடு

முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி சென்னை, மார்ச் 21– புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ. 1500 கோடி ஒதுக்கீடு செய்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் க.அருள் சங்கு, மாநில பொதுச்செயலாளர் வெ. சரவணன், மாநில பொருளாளர் த.ராமஜெயம்ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டசபையில் நேற்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் 18 லட்சம் தொடக்க பள்ளி மாணவர்கள் பயன் பெறுகின்ற வகையிலே […]

Loading

செய்திகள்

பெங்களூரு-மைசூரு சாலையில் வழிப்பறி கொள்ளை: 5 பேர் கைது

பெங்களூரு, மார்ச் 21– பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையில் வாகனங்களை வழிமறித்து கொள்ளையடித்து வந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையை கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி திறந்து வைத்தார். இருப்பினும், அதற்கு முன்பாகவே இந்த சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஒரு கும்பல் அந்த விரைவுச்சாலையில் செல்லும் கார் உள்ளிட்ட வாகனங்களை வழிமறித்து, அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தை […]

Loading

செய்திகள்

மகளிர் உரிமை தொகை அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு, 85% தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம் சென்னை, மார்ச்.21- யார், யார் மகளிர் உரிமை தொகை பெற முடியும் என்ற வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளி யிடப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்றும், இதை எடப்பாடி பழனிசாமி முழுவதுமாக படிக்காமல் கருத்து தெரிவித்து உள்ளார் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். சட்டசபை வளாகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:- தேர்தலில் கொடுக்கப்பட்ட 85 சதவீத வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். மீதம் இருக்கும் 15 சதவீத […]

Loading

செய்திகள்

இல்லத்திலும் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைத்திடட்டும்: ஸ்டாலின் உகாதி வாழ்த்து

சென்னை, மார்ச் 21– தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ‘உகாதி’ திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– உகாதி திருநாளில் தங்களது புத்தாண்டு நாளை (22-.3.2023) கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட உடன்பிறப்புகளுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அறுசுவை உணவோடு மகிழ்ச்சி பொங்க புத்தாண்டை வரவேற்கும் உங்களது இல்லத்திலும் வாழ்விலும் அந்த மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திட நெஞ்சார வாழ்த்துகிறேன். தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் […]

Loading

செய்திகள்

உக்ரைனுக்கு ரூ.2,900 கோடி மதிப்பில் ஆயுதம், போர் கருவிகளை அனுப்பும் அமெரிக்கா

வாஷிங்டன், மார்ச் 21– ரஷ்ய போரை முன்னிட்டு உக்ரைனுக்கு ஆதரவாக 2,900 கோடி மதிப்பிலான ஆயுதம் மற்றும் போர் கருவிகளை அமெரிக்கா அனுப்புகிறது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யப் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. உக்ரைனில் பாக்முக் பகுதியை கைப்பற்றும் நோக்குடன் ரஷ்யா போரிட்டு வருகிறது. உக்ரைனும் பதிலடியாக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக தொடர்ந்து, ஆயுதம் உள்ளிட்டவற்றை வழங்க அமெரிக்கா முன்வந்து உள்ளது. இதுபற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், […]

Loading

செய்திகள்

எல்.வி.எம்–3 ராக்கெட் 36 செயற்கைகோளுடன் 26ந்தேதி விண்ணில் பாய்கிறது

இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் சென்னை, மார்ச்.21- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்–3 ராக்கெட் வருகிற 26ந்தேதி 36 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் ஏவி வருகிறது. அந்தவகையில், அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் தயாரிக்கப்பட்ட மற்றொரு ராக்கெட்டான ‘எல்.வி.எம்.எம்–3′ ராக்கெட்டை […]

Loading

செய்திகள்

இலங்கைக்கு மேலும் ரூ.24 ஆயிரம் கோடி கடன் உதவி: சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

புதுடெல்லி, மார்ச் 21– இலங்கைக்கு மேலும் 24 ஆயிரம் கோடி கடன் உதவி அளிப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அந்நிய செலாவணி இருப்பு குறைந்து, உணவு தானியங்கள், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு, நாள்தோறும் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் மக்களின் கொந்தளிப்பால் ஏற்பட்ட போராட்டத்தால் அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினர். அதனை தொடர்ந்து பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு […]

Loading

செய்திகள்

ஆஸ்கர் விருது பெற்ற “தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்பட இயக்குனருக்கு ரூ.1 கோடி பரிசு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் சென்னை, மார்ச் 21– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், ஆஸ்கார் விருது பெற்று உலக அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்த “தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்–ஐ ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத் தொகையாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கி, சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினார். அப்போது, இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் தான் பெற்ற ஆஸ்கார் […]

Loading

செய்திகள்

அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ்நாள் முழுவதும் உதவும் பட்ஜெட்

சென்னை, மார்ச்.21- தமிழக பட்ஜெட், அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ்நாள் முழுவதும் உதவும் பட்ஜெட் என்றும், எல்லோருக்கும் எல்லாம் என்ற திசை நோக்கிய பயணம் தொடரும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக ‘பட்ஜெட்’ குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-– எந்தவொரு ஆட்சியாக இருந்தாலும் அதனுடைய முகமாக இருப்பது ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கைதான். 2023–-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் என்பது, தலைமுறைகளைத் தாண்டி வாழ்வளிக்கும் அறிக்கையாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு […]

Loading