சிறுகதை

உன் வாழ்க்கை உன் கையில் – எம்.பாலகிருஷ்ணன்

மோகன் சோகமாக உட்கார்ந்திருந்தவனை அவன் நண்பன் செல்வன் பார்த்து என்னடா மோகா ஏன் கவலையாக இருக்கிறே? எனக் கேட்க அதற்கு மோகன் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான் மறுபடியும் அவன் நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு பதில் சொல்லாமல் இருந்தால் எப்படி? என்னடா ஆச்சி வீட்ல பிரச்சனையா? எங்கிட்ட சொல்ல மாட்டியா? இன்று செல்வன் அதட்டலாக கேட்டதும் மோகன் மெல்ல வாய் திறந்தான். மனசே சரியில்லடா செல்வா நிம்மதியா தூங்க முடியல என்று பதில் சொல்ல […]

Loading

சிறுகதை

மாறியது மாற்றம் – ராஜா செல்லமுத்து

ஓடி வந்த வாகனங்கள் எல்லாம் நான்கு பக்கமும் சாலைகள் இருக்கும் சிக்னலில் நின்றன. இடது புறம், வலது புறம், நேர், எதிர் என்று நான்கு திசைகளிலும் வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. நான்கு பக்க வாகனங்களுக்கும் நிமிடங்களைக் கொடுத்து ஒவ்வொன்றாக குறைந்து கொண்டிருந்தது சிக்கல். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில பேர் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார்கள். சில பேர் பேனா , பட்ஸ் என்று விற்றுக் கொண்டிருந்தார்கள் . தன் இருசக்கர வாகனத்தில் இருந்த படியே தென்னவன் இது […]

Loading

சிறுகதை

மழை நேரம் – ராஜா செல்லமுத்து

கேசவர்த்தினியை ஒட்டி இருக்கும் கோயில் அருகே சில ஆதரவற்ற மனிதர்கள் ஒதுங்கி இருந்தார்கள். மழை, வெயில் என்று அந்த இடம் அவர்களுக்கு என்றும் இருந்தது. வயதானவர்கள் மனப்பிறழ்வு நோய் உள்ளவர்கள் என்று சிலர் அந்த சாலையோரத்தில் படுத்து கிடப்பார்கள். மூட்டை முடிச்சுகளுடனும் அழுக்காேடு இருக்கும் அவர்களைப் பார்த்தால் யாரும் பக்கத்தில் செல்ல மாட்டார்கள். காலையிலிருந்து மாலை வரை கிடைக்கும் உணவுகளை உண்டு விட்டு இரவு நேரமானால் அந்த சாலை ஓரத்தில் இருக்கும் கோயில் அருகே இருக்கும் இடங்களில் […]

Loading

சிறுகதை

25 ஜி – ராஜா செல்லமுத்து

எப்போதும் பரபரப்பாக இருக்கும் என்.எஸ்.கே., சாலை இப்போது கொஞ்சம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. காரணம் எங்கு பார்த்தாலும் வாகன நெரிசல் .நேற்று பெய்த மழையின் ஈரம் இரண்டு பக்கமும் தங்கி இருக்கும் தண்ணீர் என்று அந்த சாலையே திணறிக் கிடந்தது. வீட்டில் இருக்கும் அத்தனை பேரும் ஆளுக்கு ஒரு கார் வைத்திருந்தால் தான் கவுரவம், மரியாதை, உசத்தி என்று என்ற பொய்யான பகட்டு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . அதனால் சென்னை மாநகரம் முழுவதும் எந்தச் சாலையில் […]

Loading

சிறுகதை

தெரியாமல் போச்சே – சேலையூர் சந்தானம்

ஜமுனாவும் ஜானகியும் ஒரே பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து நெருக்கமான தோழியர்கள் ஆனார்கள். பிறகு ஒரே கல்லூரியில் வெவ்வேறு துறைகளைத் தேர்ந்தெடுத்துச் சேர்ந்தனர். இவர்களை இவரது கல்லூரித் தோழிகள் ஜோடி வளையல் என்று அழைத்தனர். இதன் பின் ஆசிரியர் பயிற்சியை முடித்து ஒரே பள்ளியில் பணியில் சேர்ந்தனர். இருவரும் தங்களது அயராத உழைப்பை வெளிப்படுத்தி மாணவ மாணவியரின் அறிவுத்திறனை மேம்படுத்தி பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தினர். சக ஆசிரியர்கள் மற்றுமின்றி தலைமையாசிரியரும் […]

Loading

சிறுகதை

பேச்சுவார்த்தை – ராஜா செல்லமுத்து

நீலிமா ஒரு வினோதமான பழக்கமுடையவள். நிறையப் படித்து இருந்தாலும் அவள் ஒரு குழந்தையாய் தான் இன்னும் இருக்கிறாள். அறிவியல் சம்பந்தமான, அறிவு சம்பந்தமான எந்த விஷயமாக இருந்தாலும் நுனி விரலில் நுனி நாக்கில் வைத்திருக்கும் நீலிமாவின் செயல்கள் ஒரு குழந்தைத்தனத்திற்கு ஒப்பானது. பள்ளி, கல்லூரி , பல்கலைக்கழகம் என்று படித்திருந்தாலும் அவளின் நடவடிக்கைகள் எல்லாம் பார்ப்பவர்களுக்கு விசித்திரமாக தோன்றும் ‘ வீட்டில் வளர்க்கும் நாயுடன் பேசுவாள் .தெரு வழியாகப் போகும் மாடுகளுடன் பேசுவாள்; காக்கையுடன் பேசுவாள். கிளிகளிடம் […]

Loading

சிறுகதை

ஆண் பொம்மை – ராஜா செல்லமுத்து

வைதேகிக்கு வயது 32 .ஆனால் அவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை. செவ்வாய் தோஷமாே புதன் தோஷமோ எந்த தோஷமும் அவளுக்கு இல்லை. ஆனால் அவளுக்கு வரன் அமையாது தான் அவள் குடும்பத்தில் இருந்தவர்களுக்கு வருத்தமாக இருந்தது . காரணம் வரதட்சிணை தர முடியாத ஏழைக் குடும்பத்தில் பிறந்ததால் அவள் முதிர் கன்னியாகவே வாழ்ந்து கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவள் லட்சணமானவள் தான் .காதல், கீதல் என்று எந்த வம்பு தும்புக்கும் போகாமல் இருந்ததால் அவள் கழுத்தில் இன்னும் மாலை ஏறாமல் […]

Loading

சிறுகதை

சுற்றுச் சூழல் மாசு – மு.வெ.சம்பத்

சுப்பிரமணியம் அவர்களுக்கு இன்று வயது நூறு ஆரம்பம். ஊர் மக்கள் மட்டுமின்றி நிறைய வெளியூர் மக்கள் அவரிடம் ஆசி பெற வந்திருந்தனர். பத்திரிகைக்காரர்கள், தொலைக்காட்சி துறையினர் என நிறைய பேர்கள் குவிந்திருந்தார்கள். அப்படி என்ன சுப்பிரமணியம் அவர்கள் சாதித்து விட்டார் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது அல்லவா. சுப்பிரமணியம் அவர்கள் சிவசாமி – காமாட்சி தம்பதிக்கு பிறந்தவர். சின்னக் கிராமத்தில் பிறந்த அவரை அவரது தந்தை நன்கு படிக்க வைத்தார். படிப்பு முடிந்ததும் சுப்ரமணியர் வேளாண்துறையில் வேலைக்குச் […]

Loading

சிறுகதை

அன்புடன் ஆம்புலன்ஸ்- ராஜா செல்லமுத்து

அரசாங்கம் தார்ச்சாலை போடாத ஒரு கிராமத்தில் ஒரு பெண் பிரசவத்திற்காகத் துடிதுடித்துக் கொண்டிருந்தாள். கைப்பக்குவத்தில் பிரசவம் பார்த்து விடலாம் என்று ஒரு வயதான பெண்மணி சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள மறுத்த அந்த கற்பினியின் குடும்பத்தார்கள் ஆம்புலன்சுக்கு போன் செய்தார்கள். ஏன்டி எந்த ஆம்புலன்ஸ்காரன் இங்க வருவான்? இப்படி பிள்ளை பெறுவற்கு துடிச்சிட்டு இருக்குற பொம்பளைய எவன் கூட்டிட்டு போவான் ? ஆம்புலன்சுக்கு போன் பண்றேன்னு சொல்றியே இது நடக்குமா ? என்று சுற்றி இருப்பவர்களில் ஒரு […]

Loading

சிறுகதை

ராணுவ வீரரின் செயல் -மு.வெ.சம்பத்

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக இரண்டு கிராமங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எங்கும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக் காடாக்கியது. மேக வெடிப்பே இதற்குக் காரணம் என வானிலை அறிக்கைகள் தெரிவித்தன. இன்னும் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்ற அறிவிப்பை வானிலை மையம் கூறியதும் எல்லா ஏற்பாடுகளையும் துரிதமாக செயல் படுத்தி எல்லா மக்களையும் பாதுகாப்பாக அங்குள்ள பள்ளிகளில் தங்க வைத்தனர். அந்த பள்ளிக் கட்டிடங்கள் சிறிது உயரமாகக் […]

Loading