சிறுகதை

வட்டிக்குப் பணம் – எம்பாலகிருஷ்ணன்

‘‘கருப்பா நில்லு’’, என்கிட்ட கடன் வாங்கி நாலு மாசமாகுது. நீ ரெண்டு மாசம் ஒழுங்கா வட்டி கொடுத்தே; அதுக்கப் புறம் வட்டி தராம ஏமாத்திட்டு இருக்கே ஏன் என்று கருப்பனிடம் கேட்டார் வட்டிக்கு பணம் கொடுக்கும் மலையப்பன். அண்ணே கோவிச்சிக்காதீங்க; என்னோட பொண்டாடிக்கு உடம்புக்கு முடியல. ஆஸ்பத்திரி செலவு வந்திடிச்சி. இந்த ஒரு மாசமட்டும் பொறுத்துக்கங்க; அடுத்த மாசம் சேர்த்து கொடுத்துடுறேன் என பதில் சொன்னான். இந்த மாசமே வட்டியை கொடுக்க முடியல. அடுத்த மாசம் எப்படி […]

Loading

சிறுகதை

ஓர் ஓவியம் – ராஜா செல்லமுத்து

நூறடிச் சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தது பொலிரோ கார் . எதிர் திசையில் இருந்த சிக்னல் விழ,சட்டென பிரேக் அடித்து காரை நிறுத்தினார் ஓட்டுநர். ஆங்காங்கே வேகமாக வந்து கொண்டிருந்த வாகனங்கள் எல்லாம் அந்த சிக்னலில் நின்று இளைப்பாறின. முன்னால் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது ஒரு இருசக்கரவாகனம் மோத ஆட்டோவில் இருந்து கீழே இறங்கிய இருசக்கர வாகனம் ஓட்டியவனை தாறுமாறாகத் திட்டினான் ஆட்டோக்காரன் . யோவ்,எவ்வளவு தைரியம் இருந்தா வண்டியை இடிப்பே ? என்று ஆட்டோக்காரன் […]

Loading

சிறுகதை

ஏங்க… என்னங்க…!- ராஜா செல்லமுத்து

… ஏங்க சாப்பாடு எடுத்து வைங்க. நீங்க சாப்டீங்களா ? பிள்ளைங்க சாப்பிட்டார்களா? நான் வரணும் அப்படிங்கறதுக்காக நீங்க வெயிட் பண்ண வேணாம். நீங்க சாப்பிடுங்க. ஏன்னா நான் நைட்டு எத்தனை மணிக்கு வருவேன்னு எனக்கே தெரியாது.நான் சாப்பிட்ட பிறகு தான் நீங்க சாப்பிடணும் அப்படிங்கிற பழைய பஞ்சாங்கத்தை எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு உங்களுக்கு எப்ப பசிக்குதோ அப்ப நீங்க சாப்பிடுங்க என்று தன் மனைவி மணியம்மாளிடம் கரிசனையோடு சொன்னார் ராமசாமி. நீங்க வந்த பிறகு தான் […]

Loading

சிறுகதை

வேலைஇல்லாதவன் – எம்.பாலகிருஷ்ணன்

பெருமாளைப் பார்க்கும் போதெல்லாம் கோபம் கொந்தளித்தவனாக இருப்பான் கோவிந்தன். பின் இருக்காதா? கோவிந்தனுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவனிடம் இரண்டு இலட்சத்தை வாங்கி ஏப்பம் விட்டவனாச்சே. பெருமாள் அரசாங்க அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறான். இவன் கோவிந்தனுக்கு ஆசை வார்த்தைகள் கூறினான். உனக்கு கவர்மென்ட் வேலை வாங்கித் தர்றேன். அதுக்கு நான்கு இலட்சம் செலவாகும் என்றுக் கூற கோவிந்தனும் அவன்கூறிய வார்த்தைகளை நம்பி பெருமாளிடம் முன் பணமாக இரண்டு இலட்சம் கடன் வாங்கிக் கொடுத்தான். […]

Loading

சிறுகதை

மனம் மாறிய மருமகள் – ஆர்.வசந்தா

அன்றும் வழக்கமான காட்சி நடைபெற்றது சிவராமனின் தாய்க்கும் தாரத்திற்கும் தான். மனைவி பிரியா சொன்னாள்: இன்று பச்சைப் பட்டாணி பொரியல் என்று. அம்மா பார்வதி சொன்னாள்: இன்று வெண்டைக்காய் என்று. இருவருக்கும் முடிவில்லா மோதல் தான். சிவராமன் சொன்னான்: இதுவும் வேண்டாம் அதுவும் வேண்டாம். ஏதாவது ஒன்றை என் சாப்பாட்டுத் தட்டில் போடுங்கள் என்று கூறி சண்டையை முடித்து வைத்தான். இது முடிந்ததும் வேலைக்காரிக்கு கழுவச் சாமான்களை சிங்க்கில் போடுவது யார் என ஒரு யுத்தம் நடந்தது. […]

Loading

சிறுகதை

நேரம் தவறாதவன் – எம்.பாலகிருஷ்ணன்

முனியாண்டி விவசாய வேலைக்குச் சென்று வந்தான். ஆனால் தற்போது போதிய மழை இல்லாததால் விவசாயம் நடைபெறவில்லை. மேலும் விவசாய நிலங்கள் மனை நிலங்களாக மாறிவிட்டதால் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு வேறொரு வேலைக்குச் சென்றனர். அதுவும் கூலி வேலைக்கு . அந்த வேலைக்குச் செல்ல கிராமத்திலிருந்து சிலர் நகரத்திற்கு கட்டிட வேலைக்கும் ரோடு போடும் வேலைக்கும் கிளம்பினர். அந்தப் பணிக்குச் செல்ல பேருந்தை நம்பித் தான் அவர்கள் இருந்தார்கள். அதுவும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தால்தான் […]

Loading

சிறுகதை

ஆசை நிறைவேறியது – மு.வெ.சம்பத்

கீதா தனது படிப்பு முடிந்ததும் திருச்சியில் வேலைக்குச் சேர்ந்தாள். திருவரங்கத்தில் உள்ள ராகவனுக்கும் கீதாவிற்கும் திருமணம் முடிந்து திருவரங்கத்தில் அவர்கள் வாசம் தொடர்ந்தது. கீதா வேலை பார்க்கையில் தனது பொழுது போக்காக கதைகள் எழுதி பத்திரிக்கைக்கு அனுப்பி அது பிரசுரம் ஆகி வந்தது கண்டு ஆனந்தம் அடைவாள். நாளடைவில் இவளது பெயர் சற்று பிரலமான வேளையில் தனது குடும்ப பொறுப்புக்கள் காரணமாக கதை எழுதுவதில் கீதாவிற்கு தொய்வு ஏற்பட்டது. குழந்தைகள் இரண்டு பிறக்கவே அவர்களை கவனிக்கும் பொறுப்பு […]

Loading

சிறுகதை

நன்றி மறக்காதவர் – எம்.பாலகிருஷ்ணன்

‘‘அப்பா நீங்க எப்ப ரிட்டையர்மென்ட் ஆகப் போறீங்க ’’ என்று மகன் செல்வன் தன் தந்தையிடம் கேட்டான். அதற்கு தந்தை முத்தையா ,‘‘ஏன் இப்படி திடீர்ன்னு கேட்குறே ’’எனக்கேட்டார். அதற்கு மகன், ‘‘சும்மா தெரிஞ்சிக்கலா முன்னு கேட்டேன்பா’’ நான் ரிட்டையர்மென்ட் ஆகுறதுக்கு இன்னும் ரெண்டு வருசம் இருக்கு என்றார் அப்பா. அப்படியாப்பா என்று தன் மனதில் எதோ நினைத்தான். இதையறிந்த தந்தை முத்தையா ‘‘என்னடா பலமா யோசிக்கிறே ’’என்றுக் கேட்டார். ‘‘இல்லப்பா நீங்க ரிட்டையர் ஆனதும் உங்களுக்கு […]

Loading

சிறுகதை

மின்தகன முன்பதிவு – ராஜா செல்லமுத்து

காலைப் பொழுதில் இறந்து போன தன் தாய் துளசியின் அருகிலேயே அமர்ந்திருந்தார் சுந்தரமூர்த்தி. சோகமும் வருத்தமும் அப்பிக் கிடந்தது அவரிடத்தில். அவரைச் சுற்றி சொந்தங்கள், உறவுகள், நண்பர்கள் எல்லாம் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நேற்று இரவு நன்றாக இருந்த துளசியம்மாள் திடீரென்று மரணம் அடைந்தது குடும்பத்தினர்களுக்கு பெரும் வருத்தத்தையும் சோகத்தையும் தந்தது. சுந்தரமூர்த்தியோடு சேர்த்து ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்த துளசியம்மாள் மங்களகரமாகத்தான் போய் சேர்ந்திருக்கிறாள் என்பது உறவுகளுக்கு தெரியும். இருந்தாலும் பெற்ற தாயின் இழப்பை அந்த குடும்பத்தினர்களால் […]

Loading

சிறுகதை

நலம் விசாரிப்பு – ராஜா செல்லமுத்து

உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் வெப்ப நேரத்தில் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார் பெருமாள். காலையில் அலுவலகத்திற்கு வந்து வேலைகளைப் பார்த்துவிட்டு மதிய உணவிற்கு முன்னால் அவர் ஒரு பழச்சாறு குடிப்பது வழக்கம். நீண்ட நேரம் சேரில் அமர்ந்து வேலை செய்வது உடலுக்கு நல்லதல்ல என்பதையும் மனதில் வைத்துக் கொண்டு காலாற வெளியே நடந்து வந்து ஒரு பழச்சாறையும் அருந்தி விட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த பெருமாள், அன்று எப்போதும் போல மதிய உணவு இடைவேளைக்கு முன்னால் […]

Loading