சிறுகதை

சிறுகதை … சீனியர்ஸ் …. ஜூனியர்ஸ்..! …. ராஜா செல்லமுத்து

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேர்தல் பற்றிய அறிவுள்ளவரைக் கூப்பிட்டு வியூகம் வகுத்து வெற்றி பெறுவது எப்படி? என்று அரசியல்வாதிகள் செய்வதைப் போல அந்த நிறுவனம் முழுவதும் கணினிமயமாக்கிய பிறகு என்ன செய்யலாம்? என்று யோசித்தார் முதலாளி. அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் போல, ஸ்ரீ என்பவர் அலுவத்திற்கு வந்தார். அந்த நிறுவனத்தில் நிறைய சீனியர் ஊழியர்கள் பணியில் இருந்தார்கள். ஆனால், தற்போதைய கணினி அறிவு அவர்களுக்கு இல்லாமல் இருந்தது. அனுபவத்திலும் அறிவிலும் முதிர்ச்சி பெற்றவர்கள் தான் , […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

செயல்..! – ராஜா செல்லமுத்து

“இதுல எவ்வளவு பணம் இருக்குன்னு பாரு ? “ என்று ஆறுமுகத்திடம் கட்டுக் கட்டாகப் பணத்தைக் கொடுத்தார் மாசிலாமணி. “இந்தா ஒரு நிமிஷம் “ என்று சொன்ன ஆறுமுகம் அவ்வளவு பணத்தையும் எண்ண ஆரம்பித்தார். ” ரெண்டு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் இருக்கு “ என்று ஆறுமுகம் சொல்ல ” என்னது ரெண்டு லட்சத்து இருவது ஆயிரம் தான் இருக்கா ?” ” ஆமா “ ” இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் இல்லையா ? இங்க கொடு”என்று […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

இது வேறு ..! – ராஜா செல்லமுத்து

“உங்கள இப்படிப் பேசியிருக்கக் கூடாது தங்கப்பாண்டி. அதுவும் நடுரோட்டுல வச்சு, எல்லாரும் உங்களையே வேடிக்கை பாத்துட்டு போனாங்க. குப்புசாமி கூட உங்களுக்கு என்ன பிரச்சனை? ஏன் அப்படி உங்களைத் திட்டிக்கிட்டு இருந்தார் ? என்று ரவி கேட்க ” என்னையவா குப்புசாமி திட்டுனார் இல்லையே? “ என்று குழம்பிப் போய் கேட்டான் தங்கப்பாண்டி. ” அதாங்க நேத்து உங்கள ரோட்ல வச்சு திட்டிகிட்டு இருந்தாரே குப்புசாமி அதத்தான் சொல்றேன்?” என்று ரவி மறுபடியும் சொல்ல “இல்ல அவர் […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

அத்துமீறல்..! – ராஜா செல்லமுத்து

” நீ எப்படி அந்த கழிவறைக்குள்ளே போகலாம்? இது தப்பு “ என்று வாதாடினான் ராமராஜன். ” இல்லங்க அவசரமா இருந்தது. அதுதான் போயிட்டேன் “ வேலை செய்து கொண்டிருக்கும் மூர்த்தி சொல்ல அதற்கு கொஞ்சம் கூட சம்மதிக்காத ராமராஜன் மூர்த்தியை திட்டுவதிலேயே கவனமாக இருந்தான். ” யாராவது வந்திருந்தா என்ன ஆயிருக்கும் ? தப்பு தானே?” ” இல்ல . யாரும் வர மாட்டாங்கன்னு நான் போயிட்டேன். “ “அது எப்படி நீ இப்பிடி சொல்ற? […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

காலம் வரும் வரை…. – ஆர். வசந்தா

ராஜதுரை, சுகுணா, வதனா, நளினா என்று நான்கு குழந்தைகள் சிவசந்திரன்– மல்லிகா தம்பதியினருக்கு. சுகுணா, வதனாவிற்கு சீக்கிரமே வரன் அமைந்து மணம் முடித்து விட்டார் சிவச்சந்திரன். நல்ல வசதியான பெரிய இடமாகவே அமைந்து விட்டது. ராஜதுரைக்கும் நல்ல வேலையில் அமர்ந்தவுடனே மணம் முடித்து விட்டார். சித்ரா என்ற பெண்ணை தன் உறவிலேயே மணம் முடித்தார். நளினா மட்டும் பிளஸ் 2 வில் நல்ல மார்க்குகள் வாங்கியதால் மெடிக்கல் சீட் கிடைத்தது. எதிர்பாராத விதமாக சிவச்சந்திரனும் மல்லிகாவும் காலமானார்கள். […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

சோதனை..! – ராஜா செல்லமுத்து

அது பின்னிரவுப் பொழுது. ஈசிஆரில் உள்ள பங்களாவில் தடபுடலான விருந்துகள், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று அத்தனையும் முடித்துவிட்டு ,வீடு திரும்பினார்கள் இளசுகள், பல ஜோடிகள். சில குடும்பங்கள். அதில் ஜாஸ்மின், நீரவ் ஜோடிகள் தங்கள் காரை எடுத்துக் கொண்டு தார்ச்சாலையில் விரைந்து கொண்டிருந்தார்கள் . ஆள் அரவமற்ற அந்தத் தார்ச்சாலையில் எந்த வாகனங்களும் இல்லாததால் அதிவேகமாக உருண்டது . ” ஏங்க கொஞ்சம் மெதுவா போங்க. தம்பி தூங்கிட்டு இருக்கான். ஏதோ எனக்கும் கொமட்டிக்கிட்டு வர்ற […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

புரிந்ததா? – மு.வெ.சம்பத்

அமுதன் அகிலாவிற்கு ஒரே ஒரு பையன். ஆனந்தன் என்று பெயர். அவனுக்கு கல்யாணம் செய்ய அமுதன் மற்றும் அகிலா பெண் பார்க்கத் தொடங்கினார்கள். அமுதன் தன் நண்பர்கள் மூலமும் தனது சகோதரன் அமரேசன் மூலமும் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அமரேசன் தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லி வைத்தார். அன்று காலையில் வந்த அமரேசன் அமுதனிடம் பக்கத்து ஊரில் தனது நண்பனுக்குத் தெரிந்தவருக்கு திருமண வயதில் பெண் இருக்கின்றாளாம். நண்பன் அவர்களிடம் பேசி விட்டு சொல்கிறேன் என்று சொல்லியுள்ளார். […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

முதல் சீட்டு…! – ராஜா செல்லமுத்து

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பி விட வேண்டும் என்று முடிவு எடுத்தார், ஞானையா .வெயிலுக்கு முன்னால் சென்று விட்டால் வேலையை அழகாக முடித்து விடலாம் என்று எண்ணியவர், அன்று இரவே அத்தனையும் முடிவு செய்து அதிகாலை ஐந்து மணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பி அருகில் இருந்த பஸ் நிலையத்திற்கு வந்தார். ஓடிக் களைத்த பேருந்துகள் எல்லாம் ஓரிடத்தில் அமைதியாக நின்றிருந்தன.. சில பேருந்துகள் தண்ணீரில் குளிப்பாட்டப்பட்டு சுத்தமாக இருந்தன. சில பேருந்துகளைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். புறப்பட தயாராக […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

வெற்று விளம்பரம்…! – ராஜா செல்லமுத்து

சில நொடிகள் கூட சில விஷயங்களை மாற்றி விடும். பெரிய பெரிய வியாபார விஷயத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் கோடிகள் சரிந்து விடும் அபாயம் இருக்கிறது. பங்கு மார்க்கெட் ,தங்க வியாபாரத்தில் இந்த நிலைகள் ஏற்படும். ஏன் மனித உயிர்கள் கூட சில நொடிகளில் உயிர் பெற்றிருக்கின்றன. சில உயிர்கள் பிரிந்திருக்கின்றன. சில நொடிகளில் இது அத்தனையும் அடங்கி இருப்பதைப் போல காளீஸ்வரன் மேற்கொண்டிருந்த தொழிலிலும் கூட அப்படித்தான் சில நொடிகளில் மாற்றம் ஏற்பட்டிருந்தது . அவர் தொழில் […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

முன்பதிவு…! – ராஜா செல்லமுத்து

சிவச்சந்திரனுக்கு பஸ் பயணம் என்றால் வேப்பங்காயாய் கசக்கும்.. அருகருகே அமர்ந்து கொண்டு பயணம் செய்யும் அவஸ்தை அவனுக்குச் சொல்லி மாளாது. அருகில் இருப்பவன் தோள்பட்டை இடித்தும் கைகள் உரசிக் கொள்ளும் எரிச்சல். வேர்வை நாத்தம் . இப்படி இந்த அவஸ்தைகளோடு பயணம் செய்வதை அடியோடு தவிர்ப்பான் சிவச்சந்திரன். ஒரு முறை இரவுப் பயணம் மேற்கொண்ட போது, அருகில் இருக்கும் நபருக்கும் இவருக்குமான கைப்பிடியில் கை வைக்கும் சண்டையில், இருவரும் கை வைக்க மாறி, மாறி எடுத்துக் கொண்டே […]

Loading