அம்மாவின் நேர்மை – ராஜா செல்லமுத்து
ராஜலட்சுமி பார்ப்பதற்கான அழகாகவும் நடுத்தர வயதை ஒட்டியவளாகவும் இருந்தாள். ஏழாவது படிக்கும் ஒரே மகன் பிரதீப். கணவன் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அடிக்கடி போன் செய்வது. வருடத்திற்கு ஒருமுறை மனைவி குழந்தையைப் பார்ப்பது என்று இருந்தார். ராஜலட்சுமியுடன் அவளின் அம்மாவோ அப்பாவோ இல்லை. ராஜலட்சுமியின் மாமியாரோ மாமனாரோ உடன் இல்லை. தனியாக தனி ஆளாகத்தான் இருந்தாள். உடன் மகன் பிரதீப் மட்டும்தான். அவளை அக்கம் பக்கம் உள்ளவர்கள் அநாகரீகமாக பேசினாலும் அதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டாள். […]