பேசும் பெண் – ராஜா செல்லமுத்து
இரவு சமைப்பதற்காக இன்டக்சன் ஸ்டவ்வை கனெக்சன் கொடுத்தான் ஜெயக்குமார். அம்மா பேசியதை இப்போது நினைத்தாலும் ஜெயக்குமாருக்கு சிரிப்புதான் வரும். சென்னைக்கு வந்து வருடங்கள் பல ஓடியிருந்தாலும் இன்னும் திருமணம் ஆகாமல் ஒண்டிக்கட்டையாகவே குடும்பம் நடத்திக் கொண்டிருப்பவனுக்கு அம்மாவின் குரல் கேட்கும் போதெல்லாம் அவள் பேசியது ஞாபகத்துக்கு வரும் . அம்மா எப்போது ஃபோன் செய்து குசலம் விசாரித்தாலும் டேய் ஜெயக்குமாரு சீக்கிரம் ஒரு கால் கட்ட போடுறா. தன்னந்தனியா இப்படியே கெடந்து நீ கஷ்டப்படணுமா? உன் கூட […]