தபால் – ராஜா செல்லமுத்து
தன்னுடைய பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டு இரண்டு மூன்று நாட்களாக அல்லாடிக் கொண்டிருந்தான் சின்னவர் . அந்த பாஸ்போர்ட் எப்படி தொலைந்தது ? எங்கு காணாமல் போனது ? என்று அவனுக்குத் தெரியாது . ஆனால் போக்குவரத்தில் தான் தொலைந்து போயிருக்கும் என்று அவனுக்கு தெள்ளத் தெளிவாக விளங்கியது . சென்னை நகருக்குள் இருக்கும் மக்கள் நெருக்கம். மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது இருக்கும் அதிகப்படியான பயணிகள், இப்படி ஏதோ இடத்தில்தான் தன்னுடைய பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதாக நினைத்தான் சின்னவர். […]