உயிர்க் காப்பகம் ….! – ராஜா செல்லமுத்து
அது ஒரு மழை நாள். தெருவெல்லாம் கொஞ்சம் மழைத்தண்ணீர் நிறைந்து நின்றது. சற்று மழை விட்டதும் ஜெயராமனும் லெனினும் டீ சாப்பிடுவதற்காக வெளியில் இறங்கி நடந்தார்கள். அப்போது ஒரு கடையின் ஓரத்தில் நடுநடுங்கியபடியே உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது ஒரு குட்டி நாய் .அது பார்ப்பதற்கு பாவமாக இருந்தது. “இந்த நாய்க்குட்டியை எப்படியாவது காப்பாத்தணும் லெனின் ” என்று ஜெயராமன் சொன்னான் ” நிச்சயமா “ என்று சொன்ன லெனின் உடனே தன் செல்போனை எடுத்து டயல் செய்தான். […]