செயல்..! – ராஜா செல்லமுத்து
“இதுல எவ்வளவு பணம் இருக்குன்னு பாரு ? “ என்று ஆறுமுகத்திடம் கட்டுக் கட்டாகப் பணத்தைக் கொடுத்தார் மாசிலாமணி. “இந்தா ஒரு நிமிஷம் “ என்று சொன்ன ஆறுமுகம் அவ்வளவு பணத்தையும் எண்ண ஆரம்பித்தார். ” ரெண்டு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் இருக்கு “ என்று ஆறுமுகம் சொல்ல ” என்னது ரெண்டு லட்சத்து இருவது ஆயிரம் தான் இருக்கா ?” ” ஆமா “ ” இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் இல்லையா ? இங்க கொடு”என்று […]