விட்டுக் கொடுத்தல்…! – ராஜா செல்லமுத்து
இனி திருநாவுக்கரசுடன் பேசக்கூடாது .அவன் பெயர்தான் திருநாவுக்கரசு. ஆனா அவன் நாவு எப்போதும் தவறாவே பேசுது. எதை பேசினாலும் ஓட்டை பானையில நண்டு விட்ட மாதிரி பேசி இருக்கிறான். ரகசியம்ங்கிறது முற்றிலும் கிடையாது. இவனை நம்பி எதுவும் சொல்லக்கூடாது என்று முடிவு செய்தான் பாலன். அதைத் தன் நண்பனான ராமநாதனிடமும் சொன்னான். முதலில் பிரச்சனையைக் கேட்ட ராமநாதன் தலையை மட்டும் ஆட்டினான். எந்த யோசனையும் சொல்லவில்லை. சிறிது நேரம் பாலன் பேசியதை அமைதியாகக் கேட்ட பிறகு பேச […]