சுதந்திரம் வீண்போகாது – எம்.பாலகிருஷ்ணன்
மாலையில் அந்த ஊராட்சி நடுநிலைப்பள்ளி முடிந்து மாணவ மாணவியர் வெளியே வந்தனர். வந்தவர்கள் சிலர் வழக்கம்போல் பள்ளி எதிரில் உள்ள சிறு கடைகளை நோக்கி வந்து அவரவர்கள் விரும்பியதை வாங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் ஸ்டேசனரி கடைக்கும் மற்ற கடைகளுக்கும் பொருட்கள் வாங்கச் சென்று கொண்டிருந்தனர். அந்த பள்ளி எதிரில் சாலையோரத்தில் இரண்டு வியாபாரிகள் கடைகள் போட்டிருந்தனர். இருவர் வண்ண வண்ண படங்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். ஒருவர் சினிமா நடிகர்கள் படங்களை வைத்தும் இன்னொரு பெரியவர் […]