கர்மா – ராஜா செல்லமுத்து
குவிந்து கிடக்கும் எச்சில் பாத்திரங்களையும் கடித்துத் துப்பிய எலும்புத் துண்டுகளையும் சேகரித்து அள்ளியபோது அற்புதத்திற்கு அழுகையே வந்தது. இது யார் துப்பிய எச்சி யார் வீட்டுக்கு வேல செய்கிறது? இதுவெல்லாம் நமக்குத் தேவைதானா? கேவலம் சம்பளத்திற்காக சுயமரியாதை விக்கிறதா? எப்படி எல்லாம் வாழ்ந்த நாம இப்படி ஆகிவிட்டோமே? என்று மனதிற்குள் புழுங்க எச்சில் பாத்திரங்களையும் எலும்புத் துண்டுகளையும் சேகரித்து அள்ளியபோது அற்புதத்தின் கண்கள் கரகரவென்று கண்ணீர் பெருகியது. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். இன்னும் என்னென்ன […]