பாஸ் வேர்டு – ராஜா செல்லமுத்து
முன்னிரவு முற்றி பின்னிரவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது இரவு .லேசாக தூறல் போட்டுக் கொண்டிருந்தது வானம். எங்கோ கத்திக் கொண்டிருந்தன நாய்கள். பரசுராமன் புரண்டு புரண்டு படுத்தான். வெப்பத்தை விட்டுக் குளிரை போர்த்தியிருந்தது தரை. வெறும் தரையில் பாயை மட்டும் விரித்துப் படுத்திருந்த பரசுராமனுக்கு கொஞ்சம் ஈரம் தட்டியது. ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்த பரசுராமனின் காதில் பக்கத்து வீட்டுக்காரர்கள் சண்டை போடும் சத்தம் கேட்டது. என்ன இது? இந்த நடு ராத்திரியில் அதுவும் மழை நேரம் யாரு […]