கருணை…! – ராஜா செல்லமுத்து
அந்தத் தெருவிலேயே பிரம்மாண்டமாக இருந்தது ரத்தினத்தின் வீடு. அக்கம் பக்கம் வசிப்பவர்கள் யாருடனும் பேச மாட்டார் . யாருடனும் அன்பாகப் பழக மாட்டார். சிடுமூஞ்சிக்காரர். சுயநலவாதி என்றெல்லாம் ரத்தினத்தைப் பற்றி பேசிக் கொள்வார்கள் அந்தத் தெருவில் வசிப்பவர்கள். ” ரத்தினத்துக்கு தான் பெரிய பணக்காரர் அப்படிங்கிற திமிரு. யார்ட்டையும் பேசுறதில்ல. வீட்டுக் கதவ அடைச்சுட்டா திறக்க மாட்டாங்க. வீட்டுக்கு வர்றவங்கக் கிட்டக் கூட சரியான அணுகுமுறை இல்ல” என்று ரத்தினத்தைப் பற்றி அந்தத் தெருவில் உள்ளவர்கள் பேசிக்கொள்வார்கள். […]