நீலம் பிரிந்த வானம் – நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
இவ்வளவு சீக்கிரம் கோமதி தன்னைவிட்டுப் போவாள் என்றும் சிறிதும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை ஜம்புலிங்கம் ஐம்பது வருட தாம்பத்யம்.கொரானாவின் கொடிய தாக்கம் அவர்களை பிரித்துவிடக் கூடும் என்று கனவிலும் நினைக்கவில்லை! ஒரேநாள்தான்! காய்ச்சல் என்றதும் மருத்துவரைப் போய் பார்த்தனர். சி.டி ஸ்கேனில் கொரானா உறுதியாக அட்மிட் செய்தார். சிகிச்சை தொடர்ந்து கொண்டிருக்கும் போதே மூச்சுத்திணறல் அதிகமாக ஆக்ஸிஜன் பெட் கிடைக்கவில்லை! ஏற்பாடு செய்வதற்குள் எல்லோரையும் ஏமாற்றிச் சென்றுவிட்டாள் கோமதி. ஒரே மகன், திருமணத்திற்கு பின் வெளிநாட்டுவாசி ஆகிவிட்டான். […]