புதுடெல்லி, டிச.29- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக கைதான 8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கத்தார் கோர்ட் குறைத்தது. இந்திய கடற்படையில் அதிகாரிகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற 8 பேர், மேற்கு ஆசிய நாடான கத்தாரின் தோஹா நகரில் உள்ள அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். அந்நிறுவனம், கத்தார் ஆயுதப்படைகளுக்கும், பாதுகாப்பு அமைப்புகளுக்கும் பயிற்சி அளித்து வருகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், அந்த […]