செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

அடுத்த 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதலை தொடங்கும்: பாகிஸ்தான் அமைச்சர் அலறல்

இஸ்லாமாபாத், ஏப். 30– அடுத்த 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதலை தொடங்கும் என பாகிஸ்தான் அரசை அந்நாட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் எதிர்வினைகளை கண்ட பாகிஸ்தான், தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்று எதிர்பார்ப்பு, அதை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதனால் இருநாடுகளின் எல்லைகளில் பதற்றம் காணப்படுகிறது. இந் நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் இருந்து 36 மணி நேரத்திற்குள் இந்தியா […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

‘ஒரு கை பார்ப்போம்’: ஸ்டாலின் ஆவேசம்

234 தொகுதிகளிலும் வென்று 7வது முறையாக ஆட்சி சென்னை, ஏப். 30– நம்மை எதிர்க்கக் கூடியவர்கள் எந்த நிலையில் வந்தாலும் சரி, எப்படிப்பட்ட கூட்டணியை வைத்துக்கொண்டு வந்தாலும் சரி ஒரு கை பார்ப்போம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்றும் அவர் கூறினார். உலகத்திற்கே வழிகாட்டக் கூடிய சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்றும் முதலமைச்சர் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில், மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் த. […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ 9.60 கோடி கஞ்சா பறிமுதல்

யாழ்ப்பாணம், ஏப். 30– தமிழக கடலோரப் பகுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 9.60 கோடி ரூபாய் மதிப்பிலான 320 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், 4 பேரை கைது செய்தனர். நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு கடலோர மாவட்டங்களின் கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீப காலமாக கடத்தல் அதிகரித்து வருகிறது. கஞ்சா, சமையல் மஞ்சள், இஞ்சி, ஐஸ், போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்திலிருந்து அதிகப்படியாக இலங்கைக்கு கடத்தப்பட்டு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தேமுதிக இளைஞர் அணி செயலாளராக விஜய பிரபாகரன்

சென்னை, ஏப். 30– தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. இது விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நடைபெறும் தேமுதிகவின் முதல் பொதுக்குழு கூட்டம் ஆகும். பாலக்கோடு வெள்ளிச்சந்தை கே.வி.மஹாலில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், அணி துணை செயலாளர்கள் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மும்பைப் பங்குச்சந்தை 3 வது நாளாக ஏற்றம்:

180 புள்ளிகள் உயர்ந்து 80,468.20 ஆக பதிவு மும்பை, ஏப். 30– மூன்றாவது நாளாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 180 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நடைபெற்றது. உலகளாவிய சந்தை சாதகமாக இருந்ததால், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று தொடர்ந்து 3 வது நாளாக ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 180 புள்ளிகள் உயர்ந்து 80,468.20 ஆக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) நிஃப்டி 39.65 புள்ளிகள் உயர்ந்து 24,375.60 ஆக […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

தி.மு.க. கூட்டணி வெல்லும் !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி சென்னை, ஏப்.30- 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கொளத்தூர், ஜமாலியா லேன் திட்டப்பகுதியில் 23 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 130 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். மேலும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

உக்ரைன் மீதான போர் 3 நாட்களுக்கு நிறுத்தம்:

ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு மாஸ்கோ, ஏப். 29– உக்ரைன் மீதான போரை 3 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். ஏற்கெனவே போர் நிறுத்தம் குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்துள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பு அதிபர் டிரம்ப், “இரு நாடுகளும் தாக்குவதை நிறுத்தி ஒரு […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து 5வது நாளாக அத்துமீறல் :

இந்திய ராணுவம் தக்க பதிலடி ஸ்ரீநகர், ஏப். 29– தொடர்ந்து 5வது நாளாக ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது, பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான், இந்தியா இடையே பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஜம்மு–காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் களம் இறங்கி உள்ளனர். சந்தேக நபர்கள் இருக்கும் இடங்களில் பாதுகாப்பு பிரிவினர் அதிரடியாக சோதனை நடத்தி […]

Loading

சினிமா செய்திகள் நாடும் நடப்பும்

நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷண் விருது:

ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார் புதுடெல்லி, ஏப்.29- நடிகர் அஜித்குமார் உட்பட, 71 பேருக்கு பத்ம விருதுகளை, டெல்லியில் நேற்று நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். கலை, அறிவியல், இலக்கியம், வர்த்தகம், மருத்துவம், சமூக சேவை போன்ற துறைகளில் சிறந்தவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகிய பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு அடுத்த நிலையிலான இந்த உயரிய விருதுகள் இந்த ஆண்டுக்காக […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பஹல்காம் விவகாரம்: பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு

புதுடெல்லி, ஏப். 28– பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (திங்கள்கிழமை) சந்தித்தார். இந்த சந்திப்பு பிரதமரின் இல்லத்தில் நடந்தது. எல்லையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் இருந்து 5 கி.மீ. தள்ளியிருக்கும் பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த 22ம் தேதி நடத்திய கொடூரத்தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் முகாமிட்டு தேசிய புலனாய்வு முகமை தாக்குதல் குறித்த […]

Loading