ஆர். முத்துக்குமார் அமெரிக்காவில் தொடரும் பள்ளி வளாக தீவிரவாதம் நெஞ்சு படபடப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு முறையும் பள்ளிப் பெயர், இறந்த மாணவர்களின் எண்ணிக்கை, தவிர மீதம் அதே தகவல்கள் தான் காண முடிகிறது. தொடரும் இச்சோக செய்திகளில் மடிந்துள்ள இளம் மாணவர்களின் குடும்பத்தாரின் நிலைமையை நினைத்துப் பார்த்தால் சோகத்தில் நம் கண்கள் ஈரமாகிறது. நேற்று அமெரிக்காவின் டெக்சாசில் யுவால்டே நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 21 பேர் பலியாகியுள்ளனர். அதில் ஒரு ஆசிரியையும் அடங்கும். இவர் பெயர் […]