ஆர்.முத்துக்குமார் இஸ்ரேல் உடனான பதற்றத்திற்கு நடுவே பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இலங்கைக்குச் சென்றுள்ளார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு இரான் அதிபர் இலங்கைக்குச் சென்றிருப்பது இதுவே முதல்முறை. அதேநேரம் அமெரிக்க கடற்படை குழுவொன்றும் திருகோணமலைக்குச் சென்றிருப்பது கவனம் பெற்றுள்ளது. இந்த சந்தர்பத்தில் ஈரானிய ஜனாதிபதி ரைசி தனது கொழும்பு விஜயத்தின் போது அதிகாரப்பூர்வமாக மத்திய மலைப் பிரதேசத்தில் ஈரானிய ஒப்பந்தக்காரர்களால் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட இரண்டு அணைகள் மற்றும் 120 […]