குடும்பத்தினர் நெகிழ்ச்சி சென்னை, ஜன. 17– உடல் உறுப்புக்களை தானம் செய்திருக்கும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் கற்பகாம்பாள் எனப்படும் பானுமதியின் மறைவுக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அவர் குடியிருந்து வந்த அயப்பாக்கம் ஊராட்சியில் தெருவின் பெயருக்கு ‘பானுமதி அம்மாள்’ என்று பெயர் சூட்டப்பட்டு, பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பானுமதி. வயது 68. ‘திடீர்’ உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். போக்குவரத்துக் […]