செய்திகள்

பட்டியலின மாணவ, மாணவியர்களைக் கொண்டு பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியை கைது

ஈரோடு, டிச. 3– பட்டியலின மாணவ, மாணவியர்களை கொண்டு கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்த வழக்கில், பள்ளி தலைமை ஆசிரியர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள பாலக்கரையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில், 32 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியை கீதா ராணி, பள்ளியிலுள்ள கழிவறைகளை, பள்ளியில் பயிலும் பட்டியலின மாணவ, மாணவிகளை […]

Loading

செய்திகள்

2023 முதல் ரெயில்வே தேர்வுகளை யுபிஎஸ்சி நடத்தும்: இந்திய ரெயில்வே அறிவிப்பு

புதுடெல்லி, டிச.3– இந்திய ரெயில்வே மேலாண்மை சேவைக்கான காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்புக்கு 2023 முதல் யுபிஎஸ்சியால் நடத்தப்படும் என்று இந்திய ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய ரெயில்வே மேலாண்மை சேவை தேர்வு (ஐஆர்எம்எஸ்இ) என்பது 2 அடுக்குத் தேர்வாக இருக்கும். முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலைத் தொடர்ந்து சோதனைத் தேர்வு நடத்தப்படும். ஐஆர்எம்எஸ் (முதன்மை) எழுத்துத் தேர்வில், தகுதிபெறும் அனைத்து விண்ணப்பதாரர்களும் சிவில் சர்வீசஸ் (முதன்மை) தேர்வில் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. […]

Loading

செய்திகள்

பாஜகவுக்கு வெறுப்பு பிரச்சாரத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது: நிதிஷ்குமார் சாடல்

பாட்னா, டிச. 3– பீகார் மாநிலத்தில் குர்கானி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் முதல்முறையாக நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இருவரும் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டபோது, பாஜகவை கடுமையாக தாக்கி பேசினர். நிதிஷ் குமார் பேசுகையில்,‘‘வெறுப்பு பிரச்சாரத்தை தவிர பாரதீய ஜனதாவுக்கு வேறு ஒன்றும் தெரியாது. நமது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பாஜக மறுத்துவிட்டது. ஒருவேளை சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தால், தற்போது பீகார் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும். பாஜக கூட்டணியை முறித்த பிறகு தான் தாய் […]

Loading

செய்திகள்

கொலீஜியம் வெளிப்படைத் தன்மையுடன் சிறப்பாக செயல்படுகிறது: சுப்ரீம் கோர்ட் கருத்து

புதுடெல்லி, டிச.3– கொலீஜியம் மிகுந்த வெளிப்படைத்தன்மை கொண்ட அமைப்பு என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் அதிகாரம் கொண்ட ஒற்றை அமைப்பு கொலீஜியம் ஆகும். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான இக்குழுவில், மூத்த நீதிபதிகள் 4 பேர் இடம் பெறுவார்கள். இக்குழுவே கொலீஜியம் என அழைக்கப்படுகிறது. இந்த கொலீஜியம் முறைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நீதிபதிகளே சக நீதிபதிகளை நியமித்துக்கொள்ளும் நடைமுறை சரியானது அல்ல […]

Loading

செய்திகள்

ஜம்மு- காஷ்மீர் எல்லையில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

ஜம்மு, டிச.3– ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் அவ்வப்போது அவர்கள் அப்பாவி பொது மக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீர் எல்லையில் உள்ளூர் போலீசாரும், பாதுகாப்பு படை வீரர்களும் இணைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். கடந்த 3 நாட்களாக நடந்த இந்த சோதனையில் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. 2 ஏ.கே. 74 ரக துப்பாக்கிகள், 2 சீன துப்பாக்கிகள், 7 தோட்டாக்கள், […]

Loading

செய்திகள்

பா.ஜ.கவின் எரிபொருள் கொள்ளை 10 மாதம் தாண்டியும் தொடர்கிறது: புள்ளிவிவரத்துடன் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு

டெல்லி, டிச. 2– பாரதீய ஜனதா கட்சியின் எரிபொருள் கொள்ளை, 10 மாதங்களாக தொடர்கிறது, அதனை முதலில் நிறுத்துங்கள் என்று புள்ளிவிவரத்துடன் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைந்ததில் இருந்தே தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டு துவக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு ரூ.100 க்கு மேல் பல மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்கள் மதிமான மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் சென்னை, டிச.2– தமிழகத்தில் 5 நாட்கள் மதிமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் 5–ந்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் கிழக்கு வங்கக்கடல் […]

Loading

செய்திகள்

கச்சா எண்ணெய்: பாகிஸ்தானுக்கு தள்ளுபடி வழங்க ரஷ்யா மறுப்பு

மாஸ்கோ, டிச. 2– பாகிஸ்தானுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் இந்தியாவுக்கு வழங்குவது போல், 30 முதல் 40 சதவீத தள்ளுபடியை வழங்க ரஷ்யா மறுத்துள்ளது. மாஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, ​​பாகிஸ்தான் தூதுக்குழுவினர் கச்சா எண்ணெயில் 30-40 சதவீத விலையைக் குறைக்கக் கோரியதைத் தொடர்ந்து, ரஷ்யா தள்ளுபடி வழங்க மறுத்துவிட்டது என்று சர்வதேச ஆங்கில பத்திரிகையான தி நியூஸ் இன்டர்நேசனல் தெரிவித்துள்ளது. தள்ளுபடி இல்லை முன்னதாக, பாகிஸ்தான் தூதுக்குழுவில் பெட்ரோலியம் துறை அமைச்சர் முசாதிக் மாலிக், மாஸ்கோவில் […]

Loading

செய்திகள்

விமான எரிபொருள் விலை 2.35 சதவீதம் குறைந்தது

டெல்லி, நவ. 2– விமான எரிபொருள் விலை சர்வதேச அளவில் குறைந்துள்ளதால், 2.3 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.118 ஆக உள்ளது. சர்வதேச அளவில் எரிபொருள் விலை குறைந்து வருவதன் காரணமாக, தற்போது விமான எரிபொருள் விலை குறைந்துள்ளது. சர்வதேச விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, மாதம் தோறும் 1-ம் தேதி விமான எரிபொருள் விலையானது மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு 2.35 சதவீதம் […]

Loading

செய்திகள்

ஸ்டான்லி மருத்துவமனையில் ‘லிப்ட்’டை சரியாக பராமரிக்காத 2 என்ஜினீயர்கள் பணி நீக்கம்

சென்னை, டிச.2– சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், மின்தூக்கிகளை (லிப்ட்) சரியாக பராமரிக்காத காரணத்தால் பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கை அறுவை சிகிச்சைச் சிறப்பு மேற்படிப்பு துவக்கம் மற்றும் புனரமைக்கப்பட்ட நூற்றாண்டு நிர்வாக கட்டட அலுவலகம் திறப்பு விழாவிற்கு, -மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்க 29.11.2022 அன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றார். அமைச்சருடன், -மக்கள் நல்வாழ்வுத்துறை […]

Loading