சென்னை, ஜன. 17– பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர், 100 நாட்களை கடந்த நிலையில், போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,000-ஐ கடந்துள்ளது. இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பின் மீது கடந்த அக்டோபர் 7-ம் தேதி போரை தொடங்கியது. இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இதனிடையே, கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. 24,000 பேர் உயிரிழப்பு இந்த தற்காலிக போர் நிறுத்தமும் டிசம்பர் 1-ம் தேதி முடிவுக்கு வந்தது. […]