டெல்லி, டிச. 1– விமானத்தின் கருவிகள் பாதிக்கப்படும் என்பதால், விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான […]