செய்திகள்

வெள்ளி கோள் குறித்து ஆய்வு நடத்த 19 கருவிகளுடன் விண்கலத்தை அனுப்ப ‘இஸ்ரோ’ திட்டம்

சென்னை, அக்.8- முதல் முறையாக வெள்ளி கோளின் நிலப்பரப்பு குறித்த வரைபடம் தயாரிக்கவும், அங்குள்ள எரிமலைகளை கண்டறிந்து ஆய்வு நடத்தவும் 19 கருவிகளுடன் விண்கலம் ஒன்றை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து 2-வதாக அமைந்துள்ள கோள் வெள்ளி (வீனஸ்). இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாகும். சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது. வெள்ளி பூமிக்கு மிக […]

Loading

செய்திகள்

‘வளர்ந்த பாரதத்தை அடையும் வரை ஓயமாட்டேன்’: பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி, அக்.8-– வளர்ந்த பாரதம் எனும் கூட்டு இலக்கு எட்டப்படும் வரை ஓயமாட்டேன் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி முதன் முதலாக குஜராத் முதலமைச்சராக பதவியேற்றார். 2014-ம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்த அவர், பின்னர் நாட்டின் பிரதமரானார். அந்த பதவியிலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறார். இதன் மூலம் குஜராத் முதலமைச்சர் மற்றும் நாட்டின் பிரதமர் என அரசின் […]

Loading

செய்திகள்

சென்னையில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் திருப்பதி கோவிலில் சமர்ப்பணம்

சென்னை, அக் 8–- சென்னையில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட வெண்பட்டு திருக்குடைகள் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி தலைமையில் வழங்கப்பட்டது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவத்தின்போது தமிழகத்தில் இருந்து ஏழுமலையானுக்கு வெண்பட்டு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த திருக்குடைகள், பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவையில், மலையப்ப சாமி வீதிஉலா வரும்போது சாற்றப்படுவது வழக்கம். அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்துக்காக இந்து தர்மார்த்த சமிதி சார்பில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்க தேர்தலில் திருப்பங்கள்

தலையங்கம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5 நடைபெறும், ஆம் 30 நாட்கள் கூட கிடையாது! இம்முறை முன்னால் ஜனாதிபதி டிரம்புக்கு வாக்களிப்பதா? தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்சுக்கு ஜனாதிபதியாக பணியாற்ற சந்தர்பம் தருவதா? என்ற விவாதம் அமெரிக்க வாக்காளர்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்! இந்தக் கட்டத்தில் தான் கமலா ஹாரிஸின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான சந்தர்ப்பம் உருவாகி இருக்கிறது. நாடளாவிய தேர்தல் கருத்துக் கணிப்புகள் கமலா ஹாரிஸ் மற்றும் அவரது எதிர் […]

Loading

செய்திகள்

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் போதைப் பொருள் பரவல் குறைவு: டிஜிபி விளக்கம்

சென்னை, அக். 8– பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் போதைப்பொருள் பரவல் குறைவாக உள்ள பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், “போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டும் என சென்னையில் பல பெற்றோர்கள் என்னிடம் புகார் அளிக்கின்றனர். தமிழகத்தில் அதிகளவு கஞ்சா பிடிக்கப்பட்டதாக […]

Loading

செய்திகள்

சாம்சங் தொழிலாளர்களுடன் 3 அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சம்பளம் ரூ.5 ஆயிரம் உயர்வு சென்னை, அக்.8- ரூ.5 ஆயிரம் சம்பளம் கூடுதலாக வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள்–அதிகாரிகளுடன் 3 அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள சிப்காட்டில் ‘சாம்சங் இந்தியா’ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 1,800 பேர் நிரந்தர தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். சங்கம் அமைப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9-ந் தேதி முதல், […]

Loading

செய்திகள்

திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம்

மதுரை, அக். 8– திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட திண்டுக்கல் – -திருச்சி ரெயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே, பூங்குடி- – திருச்சி ரெயில் பாதையில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோட்டில் […]

Loading

செய்திகள்

மக்களைத்தேடி மருத்துவ திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு விருது: மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை, அக்.8- மக்களைத்தேடி மருத்துவ திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு விருது வழங்கி உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:- இந்தியத் துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக நமது திராவிட மாடல் அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்து இருக்கிறது. ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதுவரையில், இந்த திட்டத்தால் பயன்பெற்றுள்ளனர். ஒவ்வொருவரது இல்லத்துக்கும் சென்று மருத்துவச் சேவைகளை வழங்கும் நமது திட்டம், […]

Loading

செய்திகள்

கோவை விமான நிலையத்தில் ரூ 1.4 லட்சம் கடத்தல் சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்

கோவை, அக். 8– அபுதாபியில் இருந்து கோவை வந்த விமான பயணி ஒருவரிடம் இருந்து ரூ 1.4 லட்சம் மதிப்பிலான கடத்தல் சிகரெட் பாக்கெட்களை விமான நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அபுதாபி – கோவை இடையே வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது. இன்று காலை 6.30 மணியளவில் அபுதாபியில் இருந்து கோவை வந்த விமானத்தில் பயணித்தவர்களிடம் விமான நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். பயணி […]

Loading

செய்திகள்

விமானப்படை நாள்: மோடி, ராகுல் வாழ்த்து

புதுடெல்லி, அக். 8– இன்று இந்திய விமானப்படை நாளையொட்டி பிரதமர் மோடி, எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். உலகளவில் திறன் வாய்ந்த விமானப்படை அமையப்பெற்ற நாடுகளில் நம் பாரத தேசமும் ஒன்றாக திகழ்கிறது. விமானப்படை வீரர்களைப் போற்றி கவுரவிக்கும் விதமாக அக்டோபர் 8-–ந்தேதி விமானப்படை நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, […]

Loading