செய்திகள்

புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது: மக்கள் பதற்றம் அடைய வேண்டாம்

தமிழக அரசு வேண்டுகோள் சென்னை, டிச.7– மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழைக்கு இடையே புழல் ஏரியின் கரை உடையும் அபாயத்தில் இருப்பதாக வெளியான தகவலுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஏரி பாதுகாப்பாக உள்ளது, மக்கள் பதற்றம் அடைய தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக நீர்வளத்துறை செயற்பொறியாளர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான ஏரியாகும். இந்த ஏரியானது […]

Loading

செய்திகள்

மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கோரிக்கை

புதுடெல்லி, டிச.7- தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். மிக்ஜாம் புயல் மழை பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தமிழக எம்.பி.க்கள் பலர் பேசினார்கள். அப்போது தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரணத்துக்கு கேட்ட நிதியில் ரூ.5 ஆயிரம் கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு, புயல் […]

Loading

செய்திகள்

அபராதம் இல்லாமல் மின்சார கட்டணம் செலுத்த 18-ந்தேதி வரை காலநீட்டிப்பு

சென்னை, டிச.7-– அபராத தொகை இல்லாமல் மின்சார கட்டணம் செலுத்த வருகிற 18-ந்தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். இதுகுறித்து நிதி, மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:- `மிக்ஜாம்’ புயலால் கடந்த 3 நாட்களாக மின்சார கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்சார நுகர்வோர்களுக்கு பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, மின் நுகர்வோர்கள் தங்களது […]

Loading

செய்திகள்

சென்னையில் இன்று மின்சார ரெயில்கள், மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின

சென்னை, டிச.7-– சென்னையில் இன்று மின்சார ரெயில்கள், மாநகர பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. ஆவடி, பேசின்பிரிட்ஜ், எழும்பூர், சென்டிரல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரெயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியது. பேசின்பிரிட்ஜ் – – வியாசர்பாடி இடையே உள்ள பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை இணைக்கும் முக்கிய பாலத்தை வெள்ளம் சூழ்ந்ததால் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து […]

Loading

செய்திகள்

கோபி செட்டிபாளையத்தில் 60 ஆண்டு பழமையான நுழைவு வாயில் இடித்து அகற்றம்

பொதுமக்கள் மறியல் கோபி, டிச. 7– ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் பகுதி சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது.அதே போல் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் பெரும்பாலான திரைப்படங்கள் எடுக்கப்பட்டது. இதனால் இந்த பகுதியை சின்ன கோடம்பாக்கம் என்று பெயர் பெற்று திகழ்ந்தது.மேலும் கடந்த 1950-ம் ஆண்டுகளில் இருந்தே கோபிசெட்டிபாளையம் பல வரலாற்று சிறப்புகளையும் பெற்று வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் வரலாற்று சின்னங்களும் கம்பீரமாக […]

Loading

செய்திகள்

மருத்துவமனையிலிருந்து அமைச்சர் செந்தில்பாலாஜி ‘டிஸ்சார்ஜ்’

மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் சென்னை, டிச. 7– மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்ற வந்த அமைச்சர் செந்தில்பாலாஜி ‘டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14-–ந்தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது செந்தில்பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் உடல் நலம் தேறியதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நீதிமன்ற காவல் அடுத்தடுத்து நீடிக்கப்பட்டு […]

Loading

செய்திகள்

கோவை நகைக் கடை கொள்ளையனின் தந்தை திடீர் தற்கொலை

தருமபுரி, டிச. 7– கோவை நகைக் கடை கொள்ளையனின் தந்தை திடீரென தற்கொலை செய்து கொண்டார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள தேவரெட்டியூரைச் சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மனைவி மாரம்மாள். இவர்களுக்கு விஜய் (வயது 28) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.கோவையில் உள்ள பிரபலமான நகை கடையில் 100 பவுன் நகை மற்றும் வைர நகைகளை விஜய் கொள்ளையடித்து சென்றுள்ளார். இதுகுறித்து கோவை போலீசார் விசாரணை நடத்தி ஆனைமலையில் உள்ள விஜயின் மனைவி நர்மதா […]

Loading

செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000: நடிகர் பாலா வழங்கினார்

சென்னை, டிச. 7– வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 உதவித் தொகையை நடிகர் பாலா வழங்கினார். ‘மிக்ஜம்’ புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நடிகர் பாலா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 121 பேருக்கு கொரோனா: 3 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 7 பேருக்கு தொற்று பாதிப்பு டெல்லி, டிச. 07– இந்தியாவில் புதிதாக 121 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 633 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 119 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் […]

Loading

செய்திகள்

புரோ கபடி லீக்: உ.பி. யோத்தாஸ், பாட்னா பைரேட்ஸ் வெற்றி

ஆமதாபாத், டிச. 7– புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் வெற்றி பெற்றன. 10-வது புரோ கபடி லீக் திருவிழா ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் […]

Loading