செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000: நடிகர் பாலா வழங்கினார்

சென்னை, டிச. 7–

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 உதவித் தொகையை நடிகர் பாலா வழங்கினார்.

‘மிக்ஜம்’ புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நடிகர் பாலா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறார். அதன் படி மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் ஆகிய பகுதிகளில் உள்ள 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 வீதம் மொத்தம் 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *