செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக 5 பேருக்கு கொரோனா

சென்னை, ஜூன்.4- தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 5 பேர் கொரோனாவால் பாதிப்படைந்து உள்ளனர். இதில் 5 பேரும் ஆண்கள் ஆவார்கள். சென்னை, செங்கல்பட்டு மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களிலும் மற்றும் வெளிநாட்டு பயணிகள் 2 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 10 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 44 ஆக உள்ளது. நேற்று தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு எதுவும் இல்லை. இந்த தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை […]

Loading

செய்திகள்

செர்பியா, சூரினாமுக்கு 6 நாள் பயணம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு புறப்பட்டார்

டெல்லி, ஜூன் 4– இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று முதல் 9-ம் தேதி வரை ஆறு நாட்கள் அரசு முறை பயணமாக, சூரினாம் மற்றும் செர்பியாவிற்கு சென்றுள்ளார். ஜனாதிபதியுடன் ஒன்றிய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, அமைச்சர் மற்றும் மக்களவை உறுப்பினர் ரமா தேவி ஆகியோர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பயணத்தின் மூலம் 2 நாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் வர்த்தக ரீதியான உறவுகள் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 நாள் அரசு முறை […]

Loading

செய்திகள்

ரயில் விபத்தை தானாகவே தடுக்கும் விதத்தில் அடுத்த ஆண்டிற்குள் அனைத்து ரயில்களிலும் ‘கவச்’ தொழில்நுட்பம்

ரயில்வே துறை அறிவிப்பு டெல்லி, ஜூன் 4– ஒடிசாவில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தை தொடர்ந்து ‘கவசம்’ எனும் பொருள்படும் ‘கவச்’ தொழில்நுட்பம் அடுத்த ஆண்டிற்குள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் விபத்துக்கு உள்ளாகி 300 க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 2011–12 ஆம் ஆண்டிலேயே நான் ரெயில்வே அமைச்சராக இருந்தபோது, விபத்துகளை […]

Loading

செய்திகள்

11 தமிழர்களை தொடர்புகொள்ள முடியவில்லை: பனீந்தர் ஐஏஎஸ்

புவனேஸ்வர், ஜூன் 4– 11 தமிழர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்று ஒடிசா சென்றுள்ள போக்குவரத்துத் துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். ரயில் விபத்தால் ஒடிசாவில் சிக்கி தவித்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக, ரயில்வே துறை சார்பில் ஒடிசாவின் பாத்ரக்கில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதில் 294 பேர் வந்த நிலையில், பலர் அவரவர் சொந்த ஊர்களில் இறங்கிவிட்டதால், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு 133 பேர் வந்தடைந்தனர். ரயில் நிலையத்தில் காத்திருந்த மருத்துவ […]

Loading

செய்திகள்

ஒடிசா ரெயில் விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை: மோடி உறுதி

பாலசோர், ஜூன்.4- ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்ப முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார். ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த பயங்கர ரெயில் விபத்து உலகையே உலுக்கி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி நேற்று டெல்லியில் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். பின்னர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். 280-க்கும் மேற்பட்டவர்கள் பலியான அந்த பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேல் இருந்து, அங்கு நடந்து […]

Loading

செய்திகள்

ஒடிசாவில் 3 ரெயில்கள் மோதல்: 275 பேர் பலி; 900 பேர் படுகாயம்

* மீட்பு பணியில் இந்திய விமானப் படை தீவிரம் * காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் 60 ஆம்புலன்ஸ்கள் பாலசோர், ஜூன் 3– ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், ஷாலிமார் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சரக்கு ரெயில்ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில் 275 பேர் பலியாகி உள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்திற்கு பிரதமர் மோடி விரைந்தார். மேற்கு […]

Loading

செய்திகள்

தேவையான உதவிகளை செய்வோம்: ஒடிசா முதல்வரிடம் ஸ்டாலின் உறுதி

தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சி அனைத்தும் ரத்து சென்னை, ஜூன் 3– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, ரெயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், தேவைப்படின், தமிழ்நாட்டின் மருத்துவக் குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் ஒடிசா மாநில முதலமைச்சரிடம், தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் தெரிவித்துக் கொண்டார். மேலும், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ் நாட்டினருக்குத் தேவையான […]

Loading

செய்திகள்

ஒடிசா ரெயில் விபத்து: சிகிச்சைக்கு ரத்தம் கொடுக்க குவிந்த இளைஞர்கள்

புவனேஸ்வர், ஜூன் 3– ஒடிசா ரெயில் விபத்தில், பலர் பலியாகி உள்ள நிலையில் 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள செய்தி அறிந்து, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ரத்தம் கொடுக்க வரிசையில் திரண்டு நின்றது பலரையும் நெகிழச்செய்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கோரமண்டல் விரைவு ரயில் கோர விபத்துக்குள்ளானது. நேற்று மாலை 7 மணி அளவில் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரெஸ், பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஒரு சரக்கு ரயில் […]

Loading

செய்திகள்

கோடைவிடுமுறை முடிந்து திரும்புபவர்களுக்காக 2 ஆயிரத்து 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்

அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு சென்னை, ஜூன் 3–- கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற 7–-ந்தேதி (புதன்கிழமை) திறக்கப்பட உள்ளது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பிய வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் வார இறுதி நாட்களில் கூடுதலாக பயணிகள் தமிழ்நாட்டில் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக போக்குவரத்து கழகம் கருதுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, […]

Loading

செய்திகள்

அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை தஞ்சாவூர், ஜூன் 3–- அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-– தமிழகத்தில் பள்ளிகள் வருகிற 7-ந் தேதி திறக்கப்படுகிறது. ஆசிரியர்கள் இந்த ஆண்டை விட கூடுதலாக மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தனியார் பள்ளி வாகனங்களின் செயல்பாடுகள் குறித்து, அந்தந்த மாவட்டங்களில் […]

Loading