செய்திகள்

தோட்டக்கலை துறை சார்பில் தூத்துக்குடிக்கு 19 டன் காய்கறிகள்

எட்டயபுரம், டிச. 21– எட்டயாபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு தோட்டக்கலை துறை சார்பில் 19 டன் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. 19 டன் காய்கறிகள் இதன் […]

Loading

செய்திகள்

குடியரசு துணைத்தலைவர் தன்கருக்கு காங்கிரஸ் எழுப்பியுள்ள 5 கேள்விகள்

டெல்லி, டிச. 21– மாநிலங்களவை தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கருக்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் 5 கேள்விகளை எழுப்பி உள்ளார். கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்புக் குளறுபடி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் ஏற்பட்ட அமளியால் 143 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி கல்யாண் பானர்ஜி, குடியரசுத் […]

Loading

செய்திகள்

கனமழை எதிரொலி: உதகை மலை ரெயில் மீண்டும் ரத்து

சென்னை, டிச. 21– கனமழை காரணமாக உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரெயில் சேவை நாளை வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையேயான மலை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. பின்னர், மீண்டும் மலை ரெயில் சேவை தொடங்கியது. நாளை வரை ரத்து இந்த நிலையில், கனமழை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பங்குச் சந்தை வளர்ச்சியும் தொழில் துறை அச்சங்களும்

நாடும் நடப்பும்  பங்கு குறியீடு 71,000 புள்ளிகளில் இருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாகத் தெரியலாம், அது உண்மையும் கூடத்தான்! ஆனால் கொரோனா பெரும் தொற்று பரவ துவங்கிய சில நாட்களில் உலகமே முழு ஊரடங்கு என்ற முடிவை எடுக்க பொருளாதார சரிவுகள் ஏற்பட ஆரம்பித்தது. பல லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதுடன் பலர் மரணம் என்ற கவலை தரும் செய்தியும் வர ஆரம்பித்தவுடன் சர்வதேச பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை கண்டது. இந்திய பங்குச் சந்தை […]

Loading

செய்திகள்

பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள்: ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை, டிச.19– பேராசிரியர் க. அன்பழகனின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– “யாரோ சிறியர் நரியர் சூதோ வாதோ செய்திடத் துணிவரேல் பேராசிரியர் கூர்வேல் பிளக்கும்! தீராப் பிணியும் தீர்ந்து தமிழினம் பிழைக்கும்! பெரியாரின் பிள்ளைகள் நாம், பேரறிஞர் தம்பிகள் நாம், என்றும் பிரியாத இருவண்ணக் கொடியே நாம்!” என கலைஞர் கவிபாடிய கழகத்தின் கொள்கைத்தூண், என் வளர்ச்சிக்கு ஊக்கம் வழங்கிய பெரியப்பா, தமிழர் நலவாழ்வுக்காகவே வாழ்ந்து மறைந்த இனமானப் பேராசிரியரின் […]

Loading

செய்திகள்

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 2500 மோசடி கடன் செயலிகள் நீக்கம்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் டெல்லி, டிச. 19– 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022 ஆம் ஆண்டு ஜூலை வரை, 2500 மோசடி கடன் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, ”மோசடி கடன் பயன்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் ஒன்றிய […]

Loading

செய்திகள்

சிங்கப்பூரில் அதிவேகமாக கூடும் கொரோனா: 56,000 பேருக்கு பாதிப்பு

சிங்கப்பூர், டிச. 19– சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வரும் நிலையில், 56,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்தது. சிங்கப்பூரில் மட்டும் டிசம்பர் மாதத்தில் தற்போது வரை சுமார் 56,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்புக்காக சிங்கப்பூரில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொது முடக்கம்? இதனையடுத்து […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 288 பேருக்கு கொரோனா; ஒருவர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் ஒருவருக்கு தொற்று டெல்லி, டிச. 19– இந்தியாவில் புதிதாக 288 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1970 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 260 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 288 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் […]

Loading

செய்திகள்

உலகிலேயே மிகப்பெரிய தியான மையம்: வாரணாசியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்

வாரணாசி, டிச.19- வாரணாசியில், உலகிலேயே மிகப்பெரிய தியான மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு நேற்று முன்தினம் சென்றார். 2ம் கட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிலையில், நேற்று அவர் ‘ஸ்வர்வேத மகாமந்திர்’ என்ற தியான மையத்தை திறந்து வைத்தார். இது உலகிலேயே மிகப்பெரிய தியான மையம் ஆகும். அம்மையம் 7 மாடிகளை கொண்டது. ஒரே நேரத்தில் 20 ஆயிரம் பேர் அமர்ந்து தியானம் […]

Loading

செய்திகள்

அதிகனமழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் அபராதமின்றி மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு

அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு சென்னை, டிச.19– திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மின் நுகர்வோர்கள் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த காலநீட்டிப்பு செய்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார் கடந்த சில தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் அதிகனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தொடர்ந்து முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை […]

Loading