மேட்டூர், அக். 27–
மேட்டூர் அணைக்கான நீர் வரத்து உயர்ந்த நிலையில், நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 50.50 அடியாக உயர்ந்துள்ளது.
அண்மையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, காவிரியில் நீர் வரத்து அதிகரித்தது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,496 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,855 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
நீர் மட்டம் உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 50.50 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், மேட்டூர் அணையின் நீர் இருப்பு 18.12 டிஎம்சியாக உள்ளது.