சென்னை, ஏப். 12–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பணவீக்கம் மற்றும் சர்வதேச காரணிகளால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரலாற்றில் முதல் முறையாக மார்ச் 28-ஆம் தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 50,000-ஐ தொட்டது. ஏப்ரல் 3 ஆம் தேதி தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து ரூ.52,000 என்ற புதிய உச்சத்தை தொட்டது.
சவரனுக்கு ரூ.640 உயர்வு
இந்நிலையில்,
வரலாற்றில் இல்லாத அளவுக்கு இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, புதிய உச்சமாக 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.54,000 ஆயிரத்தை தாண்டியது.
அதன்படி, இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6805-க்கும் சவரன் ரூ.54,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.