இஸ்லாமாபாத், ஏப். 12–
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மனைவி மற்றும் எட்டு மாத கைக்குழந்தை உட்பட 7 குழந்தைகளை கோடாரியால் கணவன் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மனைவி மற்றும் 8 மாத கைக்குழந்தை உட்பட 7 குழந்தைகள் கோடாரியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, குழந்தைகளின் தந்தையான சஜ்ஜத் கோகர் என்பவரைக் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த கொலைகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டிருக்கும் காவல்துறை தரப்பு, “சஜ்ஜத் கோகர் ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கு கவுசர் (வயது 42) என்ற மனைவியும், எட்டு மாத கைக்குழந்தை முதல் 10 வயது வரை இருக்கும் 4 மகள்களும், 3 மகன்களும் இருந்தனர்.
8 பேர் வெட்டிக்கொலை
இந்த நிலையில், கூலித் தொழிலாளியான சஜ்ஜத்க்கு போதிய வருமானம் இல்லாததால், குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டிருக்கிறது. கடும் வறுமையிலிருந்த சஜ்ஜத் கோகர், கோடாரியால் மனைவி உட்பட 8 குழந்தைகளையும் வெட்டிக் கொலை செய்திருக்கிறார். கொலை செய்யப்பட்டவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட சஜ்ஜத், பொருளாதார நெருக்கடியால் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.