பெய்ஜிங், அக். 9–
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையிலான மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர சுதந்திரமான பாலஸ்தீன நாட்டை உருவாக்க வேண்டும் என சீனா கூறியுள்ளது.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நடைபெற்று வரும் போரில், இருதரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:–
சுதந்திரமான பாலஸ்தீனம்
பொதுமக்களைப் பாதுகாக்கவும், நிலைமை மேலும் மோசமாகாமல் தடுக்கவும் இரு தரப்பும் சண்டையை நிறுத்தி அமைதிகாக்க வேண்டும். இரு நாடுகளின் தீர்வை அமல்படுத்துவதும், சுதந்திரமான பாலஸ்தீன நாட்டை நிறுவுவதுமான அடிப்படை தீர்வுகளே இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரும்.
பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்குவதற்கு சர்வதேச சமூகம் அவசரமாக செயலாற்ற வேண்டும் என்றார்.