காவேரிப்பாக்கம், நவ. 21– சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த போலீஸ்காரர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள வீராணம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் இளங்கோ (வயது 29). காஞ்சிபுரத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு பணி முடித்துவிட்டு வீராணம் புதூருக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். கல்பலாம்பட்டு ஏரி அருகே வாலாஜா – -பனப்பாக்கம் சாலை விரிவாக்கத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் […]