செய்திகள் வாழ்வியல்

சளி , ஆஸ்துமா, எலும்புருக்கி நோய்களைக் குணப்படுத்தும் புதிய மருந்து

சென்னை ஐஐடி வேதியியல் பேராசிரியை பூங்குழலி கண்டுபிடிப்பு


அறிவியல் அறிவோம்


சளி , ஆஸ்துமா, எலும்புருக்கி நோய்களைக் குணப்படுத்தும் புதிய மருந்தை சென்னை ஐஐடி வேதியியல் பேராசிரியை டாக்டர் பூங்குழலி கண்டுபிடித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் வேதியியல் பிரிவு பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் டாக்டர் பூங்குழலி. இவர் மத்திய அரசு நிதி உதவியுடன் சமீபகாலமாக வேதிப்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். தற்போது, அவர் பென்சோ பி தயோஃபேன் என்ற புதிய வேதிப்பொருளை கண்டுபிடித்து உள்ளார். இந்த வேதிபொருள் சளி எலும்புருக்கி மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு தற்போது வழங்கப்படும் மருந்தை விட மேம்பட்டதாகவும் அதற்கு பதிலாக பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த வேதிப்பொருள் பசுமை முறையிலானது மற்றும் குறைந்த வெப்பத்தை வெளிப்படுத்தும் தன்மை கொண்டுள்ளதால் ஏற்கனவே மருந்து தயாரிக்கும் பொருளுக்கு மாற்று பொருளாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது. இந்த வேதிப்பொருள் மூலம் பக்கவிளைவற்ற, குறைவான விலையில் மருந்துகளை உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *