டெல்லி, நவ. 20–
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 4,015 கனஅடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர்மட்டம் இன்று காலை 62.24 அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் லேசான மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,193 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,015 கனஅடியாக அதிகரித்துள்ளது.
62.24 அடியாக உயர்வு
அதனைத் தொடர்ந்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 62.24 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 26.38 டிஎம்சியாக உள்ளது.