செய்திகள்

மகாராஷ்டிராவில் இன்று 3.5 ரிக்டரில் நிலநடுக்கம்

தேசிய நில அதிர்வு மையம் தகவல்

மும்பை, நவ. 20–

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று காலை 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அண்மை காலமாக பல்வேறு நாடுகளில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. இந்தியா, மியான்மர், நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது.

3.5 ரிக்டரில் நிலநடுக்கம்

இந்நிலையில், மகாராஷ்டிராவில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹிங்கோலி நகரில், 5 கிலோ மீட்டர் ஆழத்தில், காலை 5.09 மணிக்கு நிலநடுக்கும் ஏற்பட்டதாக, நிலநடுக்கத்திற்கான தேசிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 3.5 அலகுகளாக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. வீடுகளில் இருந்தவர்களுக்கு நிலநடுக்க அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *