செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தேர்தல் வெற்றி செல்லும்: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை, டிச. 22– அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது செல்லும் என்று ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த 2021-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, 12 ஆயிரத்து 329 ஓட்டுகள் வித்தியாசத்தில், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெற்றிப் பெற்றார். தி.மு.க. வேட்பாளர் வழக்கு இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. வேட்பாளர் வேதரத்தினம் […]

Loading

செய்திகள்

மணிப்பூரில் 8 மாதங்களுக்கு பிறகு 87 பேரின் உடல்கள் நல்லடக்கம்

இம்பால், டிச. 21– மணிப்பூரில் வன்முறையில் உயிரிழந்த 87 பேரின் சடலங்கள், சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு பலத்த பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மணிப்பூரில் குக்கி பழங்குடியினர் மற்றும் மெய்தி இனத்திற்கும் கடந்த மே மாதம் முதலே மோதல் போக்கு ஏற்பட்டு வந்த நிலையில், வன்முறை வெடித்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், குக்கி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 594 பேருக்கு கொரோனா; 6 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 12 பேருக்கு தொற்று டெல்லி, டிச. 21– இந்தியாவில் புதிதாக 594 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2669 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 634 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 594 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று […]

Loading

செய்திகள்

அமலாக்கத்துறை சம்மன்: இன்று மீண்டும் நிராகரித்தார் கெஜ்ரிவால்

டெல்லி, டிச. 21– விசாரணைக்காக இன்று ஆஜராக, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்றும் நிராகரித்துள்ளதுடன், வழக்கறிஞர்கள் உரிய பதிலளிப்பார்கள் என்று கூறப்படுகிறது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு நவம்பர் 2 ந் தேதி ஆஜராகுமாறு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், இது சட்டவிரோதமான விசாரணை எனக்கூறி கெஜ்ரிவால் அதை நிராகரித்தார். இன்றும் நிராகரிப்பு இந்நிலையில், இன்று […]

Loading

செய்திகள்

தோட்டக்கலை துறை சார்பில் தூத்துக்குடிக்கு 19 டன் காய்கறிகள்

எட்டயபுரம், டிச. 21– எட்டயாபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு தோட்டக்கலை துறை சார்பில் 19 டன் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. 19 டன் காய்கறிகள் இதன் […]

Loading

செய்திகள்

குடியரசு துணைத்தலைவர் தன்கருக்கு காங்கிரஸ் எழுப்பியுள்ள 5 கேள்விகள்

டெல்லி, டிச. 21– மாநிலங்களவை தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கருக்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் 5 கேள்விகளை எழுப்பி உள்ளார். கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்புக் குளறுபடி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் ஏற்பட்ட அமளியால் 143 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி கல்யாண் பானர்ஜி, குடியரசுத் […]

Loading

செய்திகள்

கனமழை எதிரொலி: உதகை மலை ரெயில் மீண்டும் ரத்து

சென்னை, டிச. 21– கனமழை காரணமாக உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரெயில் சேவை நாளை வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையேயான மலை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. பின்னர், மீண்டும் மலை ரெயில் சேவை தொடங்கியது. நாளை வரை ரத்து இந்த நிலையில், கனமழை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பங்குச் சந்தை வளர்ச்சியும் தொழில் துறை அச்சங்களும்

நாடும் நடப்பும்  பங்கு குறியீடு 71,000 புள்ளிகளில் இருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாகத் தெரியலாம், அது உண்மையும் கூடத்தான்! ஆனால் கொரோனா பெரும் தொற்று பரவ துவங்கிய சில நாட்களில் உலகமே முழு ஊரடங்கு என்ற முடிவை எடுக்க பொருளாதார சரிவுகள் ஏற்பட ஆரம்பித்தது. பல லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதுடன் பலர் மரணம் என்ற கவலை தரும் செய்தியும் வர ஆரம்பித்தவுடன் சர்வதேச பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை கண்டது. இந்திய பங்குச் சந்தை […]

Loading

செய்திகள்

பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள்: ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை, டிச.19– பேராசிரியர் க. அன்பழகனின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– “யாரோ சிறியர் நரியர் சூதோ வாதோ செய்திடத் துணிவரேல் பேராசிரியர் கூர்வேல் பிளக்கும்! தீராப் பிணியும் தீர்ந்து தமிழினம் பிழைக்கும்! பெரியாரின் பிள்ளைகள் நாம், பேரறிஞர் தம்பிகள் நாம், என்றும் பிரியாத இருவண்ணக் கொடியே நாம்!” என கலைஞர் கவிபாடிய கழகத்தின் கொள்கைத்தூண், என் வளர்ச்சிக்கு ஊக்கம் வழங்கிய பெரியப்பா, தமிழர் நலவாழ்வுக்காகவே வாழ்ந்து மறைந்த இனமானப் பேராசிரியரின் […]

Loading

செய்திகள்

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 2500 மோசடி கடன் செயலிகள் நீக்கம்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் டெல்லி, டிச. 19– 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022 ஆம் ஆண்டு ஜூலை வரை, 2500 மோசடி கடன் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, ”மோசடி கடன் பயன்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் ஒன்றிய […]

Loading