செய்திகள்

இந்தியாவில் புதிதாக 148 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

டெல்லி, டிச. 09– இந்தியாவில் புதிதாக 179 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 808 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 179 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,02,889 […]

Loading

செய்திகள்

சென்னை நகரில் மழைக்கால 1,060 சிறப்பு மருத்துவ முகாம்களில் 78,663 பேர் பலன்

சென்னை, டிச. 9– முதலமைச்சரின் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாத வண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 1ந் தேதி முதல் 7ந் தேதி வரை 1,060 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 78,663 நபர்கள் பயனடைந்துள்ளனர். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று 623 இடங்களில் மழைக்கால சிறப்பு […]

Loading

செய்திகள் வாழ்வியல்

காசநோய், நுரையீரல் நோய்களைக் குணமாக்கும் வெந்தயக் கீரை

நல்வாழ்வுச் சிந்தனைகள் வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால்வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோய் நுரையீரல் நோய் குணமாகும். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் […]

Loading

செய்திகள்

புயல் மழையால் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளுக்கு புதிய அட்டவணை

சென்னை பல்கலைக்கழகம் வெளியீடு சென்னை, டிச.9- சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக்கு புதிய அட்டவணை வெளியிடப்பட்டள்ளது. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைத்து அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில் அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய அட்டவணையை சென்னை பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டிருக்கிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ந் தேதி முதல் 9ந் தேதி வரை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மக்கள் ஆரோக்கியம், மகளீர் மேம்பாடு: பிரதமர் மோடியின் நாட்டு வளர்ச்சிக்கு வெற்றி திட்டங்கள்

ஆர்.முத்துக்குமார் பருவநிலை மாற்றங்களும் அதிகரிக்கும் நோய் அவதிகள் பற்றி நன்கு தெரிந்தவர்களில் நமது பிரதமர் மோடியும் உண்டு. அதனால் தான் ஐ.நா. சபையின் பருவநிலை மாநாட்டில் பிரதான பேச்சாளராக அறிவிக்கப்பட்டு அவரது கருத்துக்களை உலகத் தலைவர்கள் உண்ணிப்பாக கவனித்துக் கேட்கும் வாய்ப்பைப் பெற்றனர். தற்போது துபாயில் ஐ.நா. சபையின் 28–வது பருவநிலை மாறுபாடு மாநாடு நடந்து கொண்டிருப்பதில் டிசம்பர் 1 அன்று மோடியை முன்வரிசையில் அமர வைத்து பிரதான பேச்சாளராக அறிவிக்கப்பட்டு அவரைப் பேச அழைத்து இருந்தனர். […]

Loading

செய்திகள்

5 ஆண்டுகளில் 34 வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு

நாடாளுமன்றத்தில் அமைச்சர் அதிர்ச்சி தகவல் டெல்லி, டிச. 08– கடந்த 5 ஆண்டுகளில் 34 வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கி இன்று 5 வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் கூறி வருகின்றனர். இதில், இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு படிப்பிற்காக சென்ற மாணவர்களில், 2018 […]

Loading

செய்திகள்

அமெரிக்க அதிபரின் மகன் 11 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு

குற்றச்சாட்டுகளால் சிக்கலில் ஜோ பைடன் நியூயார்க், டிச. 08– அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ரூ.11 கோடி வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தால், ஜோ பைடனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பலமுனை போட்டிகளையும் எதிர்கொண்டு வருகிறார். இதற்கிடையில், உலகளவில் பல சலசலப்புக்கும் பெயர்போனவராகவே வலம் வருகிறார். இந்த நிலையில், தற்போது அவரது மகன் ஹண்டர் பைடன் வரி […]

Loading

செய்திகள்

கொள்ளிடம் ஆற்று பாலத்தை உடைத்துக் கொண்டு 50 அடி ஆழத்தில் விழுந்த கார்: கேரள தம்பதி பலி

திருச்சி, டிச. 8– திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில், கார் கவிழ்ந்த விபத்தில், கேரளாவை சேர்ந்த கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர். திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி இன்று காலை கேரளா பதிவு எண் கொண்ட ஒரு கார் புறப்பட்டு சென்றது. இந்த காரில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் இருந்தனர். இந்த கார் இன்று காலை 7 மணி அளவில் திருச்சி – சென்னை […]

Loading

செய்திகள்

திருத்தணியில் வீட்டின் முன் கோலமிட்ட பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

திருத்தணி.டிச.8- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் இவர் திருத்தணி பேருந்து நிலையத்தில் ஹோட்டல் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை சங்கர் மனைவி கிருஷ்ணவேணி தனது வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டு இருந்த போது அவ்வழியாக நடந்து சென்ற வாலிபர் ஒருவர் திடீரென்று கிருஷ்ணவேணி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். கிருஷ்ணவேணி கூச்சலிட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் துரத்திப் பிடிக்க […]

Loading

செய்திகள்

சேலத்தில் நடைபெற இருந்த தி.மு.க. இளைஞரணி மாநாடு 24–ந்தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை, டிச.8– சேலத்தில் நடைபெறவிருந்த தி.மு.க. இளைஞரணி 2வது மாநில மாநாடு டிசம்பர் 24–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால், மாநாடு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தி.மு.க. தலைமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 15 அன்று கழக வரலாற்றில் முத்திரைப் பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞர் அணி முதல் மாநில மாநாட்டினை தொடர்ந்து, வருகிற 17–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று […]

Loading