செய்திகள்

கனமழை எதிரொலி: உதகை மலை ரெயில் மீண்டும் ரத்து

சென்னை, டிச. 21–

கனமழை காரணமாக உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரெயில் சேவை நாளை வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையேயான மலை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. பின்னர், மீண்டும் மலை ரெயில் சேவை தொடங்கியது.

நாளை வரை ரத்து

இந்த நிலையில், கனமழை காரணமாக இல்குரோ ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக உதகை மற்றும் மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரெயில் சேவை நாளை வரை ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *