செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு விண்ணப்பப்பதிவு தொடங்கியது

சென்னை, நவ. 1–

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு விண்ணப்பப்பதிவு தொடங்கியது.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதன்படி வரும் ஜனவரி 7-ந்தேதி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு மற்றும் பி.எட். முடித்திருக்க வேண்டும். மேலும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியானவர்கள் trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *