செய்திகள்

சிதம்பரம் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் தலை துண்டித்து படுகொலை

சிதம்பரம், ஜன. 18–

சிதம்பரம் அடுத்த திடல் வெளி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலு என்பவர் மகன் அருண் பாண்டியன் (28) இவர் சிதம்பரத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி கடந்த ஒரு மாதம் முன்புதான் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் அருண்பாண்டியன், 11-ம் வகுப்பு பள்ளியில் படிக்கும் போது அதே பகுதியைச் சேர்ந்த சக பள்ளி மாணவன் சதீஷ் என்பவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அப்போது வழக்கு பதிவு செய்த நிலையில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று சந்திரமலை பகுதி அருகே அருண்பாண்டியன் தனது நண்பர்களுடன் சீட்டு விளையாடி கொண்டிருக்கும்போது சம்பவ இடத்திற்கு சதீஷ் வந்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து சதீஷ் ,அருண் பாண்டியனை கத்தியால் வெட்டியதில் தலை துண்டிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனே சென்று உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து கடலூரில் இருந்து மோப்ப நாய்கள் கூப்பர் மற்றும் வெற்றி வர வைக்கப்பட்டு விசாரணை துரித படுத்தப்பட்ட நிலையில் தலைமறைவாகியுள்ள குற்றவாளி சதீஷை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் தலைமையில் இரண்டு தனி படைகள் அமைக்கப்பட்டு நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விருத்தாசலம் பகுதியில் குற்றவாளியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *