செய்திகள்

நெடுங்குன்றம் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் முதலைகள்: பொதுமக்கள் அச்சம்

தாம்பரம், ஜன. 2–

தாம்பரம் அருகே ஏரியில் இருந்து தொடர்ந்து சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில் உலா வரும் முதலைகளால் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் ஏரி உள்ளது இந்த ஏரியில் ஏராளமான முதலைகள் உள்ளதால் அவ்வப்போது சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றனர், இதனால் அப்பகுதியில் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தொடர்ந்து கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக முழு கொள்ளளவை ஏரி அடைந்ததால் அதில் இருந்து ஆறு அடி முதலை ஒன்று இரவில் சாலையில் இருந்து ஏரிக்கு செல்வதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பதிவு செய்தது பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் அடுத்த நான்கு நாட்கள் பிறகு அதே சாலையில் ஒன்பது அடி முதலை ஒன்று படுத்திருப்பதை கண்ட வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததன் படி அதனை பிடித்து சென்று கிண்டி வனத்துறைக்கு சொந்தமான பூங்காவில் விடப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு நெடுங்குன்றம் சாலையில் சிறிய முதலை படுத்திருப்பதை கண்ட அப்பகுதியினர் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவி வருவதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களை முதலைகள் தாக்குவதற்கு முன்பாக முதலைகளை பிடிப்பதற்கு அல்லது சரியான சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *