சென்னை, மார்ச் 27–
பொதுமக்களின் நலன் கருதி சொத்துவரி, தொழில் வரி, நிறுமவரி செலுத்துதல் மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தலுக்காக சென்னை மாநகராட்சி வருவாய்த்துறையானது 29–ந் தேதி, 30–ந் தேதி மற்றும் 31–ந் தேதி ஆகிய பொது விடுமுறை நாட்களில் இயங்கும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.