சிறுகதை

ஆட்டோ அபராதம் – ராஜா செல்லமுத்து

வைரவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் பணத்தை மட்டும் எப்படி கணக்கு கூட்டிக் கொடுக்கிறார் வாங்குகிறார் என்பது வைரவனுக்கு மட்டும் அல்ல அப்பகுதியில் உள்ள எழுதப் படிக்கத் தெரியாத அத்தனை பேருக்கும் அத்துபடி. ஒன்று, இரண்டு என்று எழுதச் சொன்னால் தெரியாத நபர்கள் எவ்வளவு பணத்தையும் ஈசியாக எண்ணி கணக்குப் பார்த்து விடுகிறார்கள் என்பது விஞ்ஞான உலகத்திற்கே ஒரு வியப்பு. வைரவனும் அப்படித்தான் . ஆட்டோ ஏறுகிறவர் இறங்குகிறவர் கொடுக்கும் பணத்தை அவ்வளவு லாவகமாக கொஞ்சம் கூட […]

Loading

சிறுகதை

தானம் – ராஜா செல்லமுத்து

நகரில் உள்ள பிரதான மருத்துவமனையில் மக்கள் கூடி நின்று கொண்டிருப்பார்கள். காரணம் ராஜேந்திரன் கைராசி மருத்துவர் என்பதுதான். அவர் குழந்தைகள் முதல் இறப்பின் விளிம்பில் இருக்கும் முதியோர் வரை அத்தனை பேருக்கும் சரியாக மருத்துவம் செய்வார் என்பது நகரில் இருக்கும் எல்லா மக்களுக்கும் தெரியும் . அதனால் எப்போதும் கூட்டம் கூடி இருப்பார்கள். மருத்துவமனை இருக்கும் தெருவிற்கு அன்று புதிதாக ஆனந்தும் அசோக்கும் வந்தார்கள். அந்த மருத்துவமனையின் வெளியில் இருந்த பெயர் பலகையில் அவர்கள் பார்த்த விஷயம் […]

Loading

சிறுகதை

சந்திப்பு – ராஜா செல்லமுத்து

அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தது மின்சார ரயில். கடற்கரைக்கும் தாம்பரத்திற்கும் இடையிலான தூரத்தை இரும்புக் கம்பிகள இணைத்திருந்தாலும் தொடர்வண்டி தான் தொலைவைக் குறைத்து மக்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. விதவிதமான மனிதர்கள். விதவிதமான பிரச்சனைகள் என்று அந்த ரயில் அத்தனை மனிதர்களையும் சுமந்து சென்று கொண்டிருந்தது. கமலா, ஜாேதி இருவரும் அந்த ரயிலில் சந்தித்துக் கொண்டார்கள். கமலாவை பார்த்த சந்தோஷத்தில் ஜோதி ரொம்பவே மகிழ்ந்தான். இருவரும் நின்று கொண்டே இருந்தார்கள். எல்லோரும் பனி முடித்துப் போகும் நேரம் என்பதால் அந்த […]

Loading

சிறுகதை

விபரீத விருப்பம் – ராஜா செல்லமுத்து

அவ்வளவாக கூட்டமில்லாத ஒரு நகரப் பேருந்தில் ஆங்காங்கே சில பெண்களும் ஆண்களும் இருக்கையில் அமர்ந்திருந்தனர். அது ஒரு மெல்லிய மழை பெய்யும் மாதம். சன்னலைத் தொட்டுத் தொட்டு ஈரம் அப்பிச்சென்றது. சிலர் ஜன்னலை அடைத்தார்கள். சிலர் அடைக்காமல் இருந்தார்கள். மென்மையான தூறல் மேனிக்கு மிக்க நல்லதென்று சிலர் நனைந்து கொண்டே வந்தார்கள் . சில ஆண்களும் பெண்களும் இருக்கையில் அமர்ந்து கொண்டு சின்னச் சின்ன சில்மிஷங்களில் ஈடுபட்டார்கள் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த சுயம்பு இதைக் கவனித்து விட்டான்.. […]

Loading

சிறுகதை

ராணுவ வீரரின் செயல் – மு.வெ.சம்பத்

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக இரண்டு கிராமங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எங்கும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக் காடாக்கியது. மேக வெடிப்பே இதற்குக் காரணம் என வானிலை அறிக்கைகள் தெரிவித்தன. இன்னும் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்ற அறிவிப்பை வானிலை மையம் கூறியதும் எல்லா ஏற்பாடுகளையும் துரிதமாக செயல் படுத்தி எல்லா மக்களையும் பாதுகாப்பாக அங்குள்ள பள்ளிகளில் தங்க வைத்தனர். அந்த பள்ளிக் கட்டிடங்கள் சிறிது உயரமாகக் […]

Loading

சிறுகதை

கோபத்தை விட்டிருந்தால்…. ராஜா செல்லமுத்து

சில நேரங்களில் கோபம்தான் ஒரு மனிதனின் குணத்தை கெடுத்து விடுகிறது. அவன் நிறத்தை அழித்து விடுகிறது. அவன் சுயத்தை மறைத்து விடுகிறது. ரமேஷ் சாந்த சொரூபி. எதற்கும் கோபப்படாதவன். குறைகள் அற்றவன். அவனுடைய வாழ்க்கையில் சின்னதாக ஏற்பட்ட கோபத்தால் அவன் வாழ்க்கை இன்று தலைகீழாகப் புரண்டு போனது. என்ன செய்வது? மனிதன் தான்இட்ட கட்டத்திற்குள் வாழ வேண்டும் என்றுதான் நினைக்கிறான். ஆனால் கோட்டை தாண்டுவதும் கேடுகள் வருவதும் எதிர் திசையில் இருப்பவர்களின் செயலால் செயல்பாடுகளால் உறவுகளால் உரசப்பட்ட […]

Loading

சிறுகதை

குழந்தையும் தெய்வமும் ஒன்று – ராஜா செல்லமுத்து

… குழந்தைகள் தெய்வத்தின் வடிவங்கள். குழந்தைகள் பூக்களின் வார்ப்புகள். குழந்தைகள் சுயநலம் இல்லாத சிற்பங்கள் என்று குழந்தைகள் நிறைய வகைப்படுத்தலாம். குழந்தைகளை யார் வேண்டுமானாலும் கொஞ்சலாம். பூக்களை யார் வேண்டுமானாலும் நுகரலாம் என்ற கோட்பாட்டுக்குள் இருந்தாள் தியா . தியா 3 வயது கூட நிரம்பாத பச்சிளம் குழந்தை. சொல்லிக் கொடுத்ததை மூளையில் அச்சு போல் ஏற்றி வைத்திருந்தாள். அந்தக் குழந்தையை ஒரு திரைப்படத்தில் நடிக்க வைத்தான் முத்து. பெரிய மனிதர்கள் நடிக்கும் அந்தப் படத்தில் குழந்தையும் […]

Loading

சிறுகதை

பக்கத்துச் சீட்டு – ராஜா செல்லமுத்து

… மணி 10 ஐத் தாெடப் போகும் இரவு வேளையில் தன் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்றிருந்தான் பரந்தாமன். அந்த இரவில் காற்று வீசாமல் உயிர் ஓவியங்களாக நின்று கொண்டிருந்தன மரங்கள் .ஒன்று கூடத் தலையாட்டவில்லை. வீதியெங்கும் வெப்பம் கக்கியது. தன் கைகுட்டையை எடுத்து வழியும் வியர்வையை துடைத்துக் கொண்டிருந்தான் பரந்தாமன். எதிர்வரும் பேருந்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவனுக்கு எரிச்சல் கூடியது. தமிழ்நாட்டின் தலைநகர் 10 மணிக்குள் கூடு அடைய கிளம்பி விட்டன பேருந்துகள். ராத்திரி […]

Loading

சிறுகதை வாழ்வியல்

வாரம் ஒரு முறை வாழைப்பூ சாப்பிட்டால் ஊட்டச்சத்து குறைபாட்டு நீங்கும்

ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க வாரத்தில் ஒரு முறையேனும் வாழைப்பூ சாப்பிட்டு வரவேண்டும். மூலம் மலச்சிக்கல் காரணமாக மூலம் ஏற்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து பணி புரிபவர்களுக்கு மூலம், பவுத்திரம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். வாழைப் பூவானது மூலம் பிரச்சனையை சரிசெய்ய பெரிதும் உதவுகின்றது. வாழைப்பூவில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கின்றது. மேலும் மூலத்தினால் உண்டான புண்கள் குணமடைய வழிவகுக்கின்றது. வயிற்றுப்போக்கு வயிற்றுப்போக்கு ஆனது உடலுக்கு சேராத உணவுகளை சாப்பிடுவதாலும், அழுகிய […]

Loading

சிறுகதை

சர்வர் – ராஜா செல்லமுத்து

… இரவு உணவு உண்பதற்காக பெரியசாமியும் பால்பாண்டியும் நகர வீதியில் வந்து கொண்டிருந்தார்கள் . எவ்வளவு அகலமான தார் சாலையாக இருந்தாலும் ஆட்களை நடக்க விடாமல் அடைத்துக்கொண்டு போகும் வாகனங்கள்; குறுகிய பாதையிலும் குறுக்கே மறித்து நிற்கும் வண்டிகள் என்று நகரச் சாலைகள் மனிதர்களை நடக்க விடாமல் செய்திருந்தன. கிராமத்திலிருந்து வந்த பால்பாண்டிக்கும் பெரியசாமிக்கும் இந்த நகர வாழ்க்கை கசந்தது. வெட்ட வெளி, பொட்டல்காடு, கை வீசி நடக்கும் அகன்ற வீதி ,மேற்கு தொடர்ச்சி மலை, சில்லென்று […]

Loading