சிறுகதை

கால்கள் – ராஜா செல்லமுத்து

வெப்பம் கக்கும் ஓர் உச்சிப் பொழுதில் செருப்பில்லாப் பாதங்களாேடு ஒரு சிக்னலில் வரும் போகும் வாகனங்களைத் தேடித் தேடிச் சென்று யாசகம் கேட்டுக் கொண்டிருந்தாள் ஏழைச் சிறுமி பார்கவி. அவள் பாதங்களில் பரவிய வெப்பம் அவள் உச்சந்தலை வரை பரவியதைப் படபடக்கும் அவள் விழிகளே சாட்சி சொன்னது. சர்ரென விரைந்து வந்த ஓர் உயர்தர வாகனம் அந்த சிக்னலைக் கடந்து செல்வதற்கு முன் பார்கவி எங்கெங்கும் பார்த்துக் கொண்டு ஓடினாள். சாலையில் ஊற்றிய தாரெல்லாம் வெப்பத்தில் உருகி […]

Loading

சிறுகதை செய்திகள்

தமிழ்நாட்டின் அதிசய அறிவியல் மேதை ஜி.டி. நாயுடு

இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்! : ஆர். வசந்தா நான் கண்டு வியந்த தமிழ்நாட்டின் மாபெரும் விஞ்ஞானி கோபாலசாமி துரைசாமி என்ற ஜி.டி. நாயுடு. நான் 1955ல் 7 வது படிக்கும்போது எங்கள் பள்ளியில் என்னையும் எங்கள் பள்ளிக் குழந்தைகளையும் உல்லாசப் பயணம் அழைத்துச் சொன்றார்கள். கோயமுத்தூரில் ஜி.டி.நாயுடு நிர்மாணித்திருந்த விஞ்ஞான கூடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு தான் பல கண்டுபிடிப்புகளைப் பார்த்து வியந்தேன். ஒரு பெரிய அறை முழுதும் அவரே செய்த சாதனங்கள் தான் இருந்தன. முதலில் […]

Loading

சிறுகதை

தேர்தல் விழா – மு.வெ. சம்பத்

வினிதா முருகனைத் திருமணம் செய்து கொண்டு வந்ததிலிருந்து முருகன் தேர்தல் வந்தாலே மகிழ்வாகி விடுவார். அவர் தனக்கு பிடித்தமான கட்சி ஆட்களுடன் சேர்ந்து பரப்புரைக்குச் சென்று விடுவார். தேர்தல் வந்தாலே அவர் தான் செய்யும் வேலையில் கவனம் செலுத்தாமல் அவர் பரப்புரையில் கலந்து கொள்வதையே முனைப்பாகக் கொள்வார். காலையில் ஆறு மணிக்குச் சென்றால் இரவு பெரும்பாலும் பதினோரு மணிக்கே வருவார். வந்ததும் ஐநூறு ரூபாயைத் தந்து விட்டு தூங்கச் சென்று விடுவார். இவர் பரப்புரை செல்லும் நாட்களில் […]

Loading

சிறுகதை

இப்படியும் பேசும் உலகம் ….! – ராஜா செல்லமுத்து

அன்று இரவு நடுநிசி கடந்த பின்பும் தூங்காமல் கண்விழித்துக் கொண்டிருந்தாள் ரேகா. நவநீதன் அப்படி கேட்டிருக்கக் கூடாது தான். கேட்டு விட்டார். என்ன செய்ய? வாடகை வீட்டில் குடியிருப்பது பெருத்த வருத்தத்தைத் தரக்கூடிய ஒரு விஷயம் தான். அதுவும் தனி மனுசியாய் அவள் குடித்தனம் இருப்பது நவநீதனுக்கு ஒரு விதமான சந்தேகத்தை ஏற்படுத்தியது. எப்பாேது வீட்டை விட்டு செல்கிறாள்.எப்போது வீட்டிற்கு வருகிறாள் என்பதையெல்லாம் தன் மூளையில் எழுதி வைத்துக்கொண்டு, அவள் வருகை எதிர்பார்த்து காத்து இருப்பார். இரவு […]

Loading

சிறுகதை

முகூர்த்த நாள் – ராஜா செல்லமுத்து

‘பெயர் பொருத்தம், நாள் பொருத்தம், முகூர்த்த பொருத்தம் எல்லாம் பார்த்து முடிவு செய்யப்பட்டது நந்தகோபாலின் திருமணம். நந்தகோபால் – கௌசல்யா திருமணப் பெயர் பொருத்தத்திற்கு ஐந்து தேதிகள் குறிக்கப்பட்டு இந்த ஐந்து தேதிகளில் எந்தத் தேதி சரியாக இருக்கும் என்று திருமண மண்டபம் பார்க்கச் சென்றார்கள். நந்தகோபால் வீட்டைச் சுற்றியுள்ள எல்லாத் திருமண மண்டபங்களும் அந்தத் தேதியில் ஏற்கனவே முன் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது எப்படி முன்பதிவு செய்யப்பட்டது? என்று நந்தகோபாலுக்கு விளங்காமல் இருந்தது .அந்தத் தேதியில் […]

Loading

சிறுகதை

குள்ளநரிக் கூட்டம் – மு.வெ.சம்பத்

முருகன் எப்போதுமே பொது நல சேவை செய்வதில் ஆர்வம் உள்ளவர். அவருடன் இணைந்த அவர் மனைவியும் சமூக சிந்தனை நிறைந்தவராக அமைந்ததில் முருகன் ஆனந்தம் அடைந்தார். இவர் வசிக்கும் பகுதிகளில் இவர் சமூக சேவை செய்வதை மக்கள் வரவேற்றதோடு மட்டுமல்லாமல் இவருக்கு உதவிகள் செய்தனர். நாளடைவில் இவர் தொண்டு செய்வது பல இடங்களுக்குப் பரவி இவர் பெயர் பிரபலமானது. இதன் விளைவாக இவரைத் தேர்தலில் நிற்கும்படி மக்கள் வற்புறுத்தி நிற்க வைத்து சட்டசபைக்கு சட்ட மன்ற உறுப்பினராக […]

Loading

சிறுகதை

துன்பம் துடைத்தவர் – மு.வெ.சம்பத்

கண்ணன் தன் மகனுக்காக தான் வாழ்ந்த இடத்தை விட்டு சென்னைக்கு வந்தார். வந்ததும் சில நாட்கள் மிகவும் சிரமப்பட்டார். முதலில் செலவினங்கள் மிரட்டின. சுவையான காய்கறிகள் சாப்பிட்ட வாய்க்கு இங்கே கிடைப்பது அரிதானது. கோதை தன்னை விட்டு சென்றது முதல் எல்லாவற்றையும் துறந்து வாழ்வதென முடிவு செய்தவர் மனைவியுடன் வாழ்ந்த நினைவை மட்டும் மறக்க முடியாமல் தவித்தார். தனது மகனுடன் வரும் போது கண்ணண் நான் வீட்டுச் செலவுகளை ஏற்றுக் கொள்ளுவேன். சம்மதம் என்றால் வருகிறேன் என்றார். […]

Loading

சிறுகதை

நூலக நண்பன் – பாலகிருஷ்ணன்

ஆறுமுகம் – அவன் குடியிருக்கும் தெருவில் பழைய பேப்பர் இரும்பு சாமான்கள் வாங்கும் ஒரு சின்னக் கடையை வைத்து பிழைப்பு நடத்துபவன். அந்தத்தெருவில் குடியிருப்பவர்கள் வீட்டில் சேரும் பழைய இரும்பு சாமான்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பழைய பாட்டில்கள் பேப்பர் போன்றவற்றை ஆறுமுகம் கடைக்குக் கொண்டு வந்து அதை எடைபோட்டு விற்று காசு வாங்கிச் செல்வார்கள். ஆறுமுகமும் தெருக்காரர்கள் கொண்டு வரும் பழைய பொருட்களை வாங்கி அதை மொத்தமாக சேர்த்து வைத்து வேனில் ஏற்றி குடோனுக்கு கொண்டு சென்று […]

Loading

சிறுகதை

பரிதாபம்! – இரா.இரவிக்குமார்

வெகு நாட்களுக்குப்பின் என் நண்பன் ரகு என்னை மொபைலில் தொடர்புகொண்டான். மூன்று வருடங்களுக்கு முன் டிராவல் ஏஜென்சியில் வேலை கிடைத்தபின் சுவீட் வாங்கிக்கொண்டு அவன் வீட்டிற்குச் சென்று நான் வேலையில் அமர்ந்த செய்தியைத் தெரிவித்தவுடன் அவன் அம்மா என்னை வாழ்த்தி அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட உடனே கேசரி செய்தது என் ஞாபகத்தில் வந்தது. அதற்குப்பின் புதிய வேலை யென்பதால் பயிற்சி, வேலைப்பளு எல்லாம் ஒன்றாகச் சேர்ந்ததால் நான் அவன் வீட்டிற்குப் போக முடியவில்லை. கிராமத்தைவிட்டு நகரத்திற்குப் படிக்கவும் […]

Loading

சிறுகதை

முகம் அறியா பேத்தியும் பேசி அறியாப் பாட்டியும்- ஆர். வசந்தா

வைஷ்ணவி ஒரு சிறிய வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தாள். படித்ததெல்லாம் அமெரிக்காவில் தான். ஒரு ரிசர்ச் வேலைக்காக சென்னை வந்தாள். வேலை அவ்வளவு சீக்கிரம் முடியவில்லை. வைஷ்ணவிக்கும் சென்னை வாழ்க்கை பிடித்து விட்டது. சென்னையிலேயே ஒரு வேலையும் தேடிக்கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள். சமையல் வேலை தான் செய்ய நேரம் ஒத்துப் போகவில்லை. சமையல் செய்ய ஆள் தேவை என்று ஒரு விளம்பரம் கொடுத்தாள் ஒரு பத்திரிகையில். ஒரு காலைப்பொழுது வெளியே ஒரு மூதாட்டி கதவை […]

Loading