செய்திகள்

இந்தியாவில் பெண்களுக்கு சாதகமாக அதிக நகரங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு

சென்னை, மார்ச் 4– இந்தியாவில் பெண்களுக்கு உகந்த நகரங்கள் பட்டியலில் சென்னை, கோவை, மதுரை இடம்பிடித்துள்ளது. “இரவில் எப்போது ஒரு பெண் தனியாக நடந்து செல்ல முடிகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திரம்” என்றார் மகாத்மா காந்தி. அவ்வாறான சூழலை உருவாக்கித் தந்துள்ள சிறந்த 5 இந்திய நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது அவதார் குழுமம். இந்தியாவில் பெண்களின் நிலை என்ற தலைப்பில் அந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு சாதகமான பணிச் சூழல், தொழிற்சாலைகளில் பெண்களுக்கு பணி வழங்குவதில் கொடுக்கப்படும் […]

Loading

செய்திகள்

இருமல் மருந்தில் கலப்படம்: உ.பி. நிறுவனத்தில் 5 பேர் கைது

லக்னோ, மார்ச் 4– இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேசத்தில் செயல்பட்டு வரும் உற்பத்தி நிறுவனத்தைச் சேர்ந்த 3 ஊழியர்கள் 2 இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் செயல்படும் ‘மேரியன் பயோடெக்’ என்ற நிறுவனத்தின் தயாரிப்பான ‘டோக்-1 மேக்ஸ்’ என்ற இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதால், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியது. சம்பந்தப்பட்ட இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டதுடன், மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு […]

Loading

செய்திகள்


தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை: வதந்தி பரப்பினால் நடவடிக்கை

சென்னை, மார்ச்.4-– தமிழகத்தில் வடமாநில தொழிலாளர் களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும், வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பெருமளவில் பணியாற்றி வருகிறார்கள். இதில் பீகார், அசாம், மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். முதலில் கட்டிட பணிக்கு வந்தவர்கள் இன்று ஓட்டல்கள், மளிகை கடை வரை பணியாற்ற தொடங்கி இருக்கிறார்கள். பனியன் நகரமான திருப்பூரில் மிக அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் பணியாற்றுகிறார்கள். இதுதவிர சென்னை, கோவை […]

Loading

செய்திகள்

பாஜக வாக்கு கேட்டு வந்தால் அடித்து விரட்டுங்கள்: இந்து அமைப்பு கொதிப்பு

பெங்களூரு, மார்ச் 4– கர்நாடகா தேர்தலை முன்னிட்டு பாஜகவினர் ஓட்டு கேட்க வந்தால், அவர்களை செருப்பால் அடியுங்கள் என இந்து சேனா தலைவர் கொதிப்புடன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜக பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பாஜகவின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து […]

Loading

செய்திகள்

தி.மு.க. கூட்டணியே நாட்டுக்கு தேவை: வெற்றிப்பயணம் தொடரும்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை சென்னை, மார்ச்.4-– ‘தி.மு.க. கூட்டணியே நாட்டுக்கு தேவை’ என எடைபோட்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். இந்த வெற்றிப்பயணம் தொடரும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- மார்ச் 1-ம் நாள் என்னுடைய 70-வது பிறந்தநாளில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திரண்ட ஆயிரமாயிரம் தொண்டர்களின் வாழ்த்து களிலும், அவர்கள் அளித்த அன்பளிப்புகளிலும் நெஞ்சம் நெகிழ்ந்தேன். தொண்டர்களுடன் பொது மக்கள் பலரும் சமூக […]

Loading

செய்திகள்

பணமோசடி: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது

சென்னை, மார்ச் 4– அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி ஏமாற்றியதாக, தலைமைச் செயலக அலுவலர் ரவி மீது ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் புகார் அளித்துள்ளார். அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, ரவி தன்னிடம் ரூ. 11 லட்சம் பணம் வாங்கிக்கொண்டார் எனத் தெரிவித்துள்ளார். 2 […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

கட்டுப்பாட்டில் தீவிரவாதம்: மேகாலயா, நாகலாந்தில் தேர்தல்கள் வெற்றியின் பின்னணி

ஆர்.முத்துக்குமார் மேகாலயா, நாகலாந்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதாவிற்கு சாதகமானதாக இருப்பது அக்கட்சிக்கு மிகப்பெரிய ஊக்க டானிக். காரணம் ஒரு வருடத்தில் நாடு தழுவிய பாராளுமன்ற தேர்தலை சந்திக்கத் தயாராக வேண்டிய சூழ்நிலையில் இத்தேர்தல் முடிவுகள் அக்கட்சி தலைமைக்கும் தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியை தருவதைப் பார்க்கின்றோம். மேகாலயாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் கட்சி அருதிபெரும்பான்மையை பெற முடியவில்லை என்றாலும் தனிப்பெரும் கட்சியாக 26 இடங்களில் வென்றுள்ளது. பாரதீய ஜனதா 2 தொகுதிகளில் வென்றுள்ளது. ஆட்சியை […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை, மார்ச் 3– தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. மழைக்காலம் முடிந்து கோடைக்காலம் துவங்கும் நேரத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் காய்ச்சல்கள் பரவுவது வழக்கம் தான். அதன்படி தமிழகத்தில் தற்போது மீண்டும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவிவரும் இந்த வைரஸ் காய்ச்சலால் பலரும் அவதி […]

Loading

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள மகத்தான அங்கீகாரம்

முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் சென்னை, மார்ச் 3–- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி குறித்து, ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-– இந்த மாபெரும் வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காள பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியானது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த மகத்தான வெற்றி. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் […]

Loading

செய்திகள்

தொழில்நுட்ப கோளாறு: சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு

சென்னை, மார்ச் 3– தொழில் நுட்ப கோளாறு காரணமாக, விமான நிலையம் – -விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னையில் தற்போது விமான நிலையம் – விம்கோ நகர் வரையும், பரங்கிமலை – சென்ட்ரல் வரையும் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரெயில் பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் எண்ணிக்கை நாள்தோறும் உயர்கிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். […]

Loading