நல்வாழ்வு சிந்தனை
குழந்தைகள் எப்பவும் சோர்வாக இருக்கிறதா? ராகி லட்டு செஞ்சு கொடுங்க சுறுசுறுப்பாகிவிடும்.
ராகி உணவு சமைத்து சாப்பிட்டால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியத்துடனும் நலத்துடனும் வாழலாம்.
ராகியில் உள்ள இரும்புச்சத்தானது, உடலில் ஏற்படும் ரத்த சோகையை குணப்படுத்துவதோடு, அக்குறைபாடு வராமல் தடுக்கும்.
ராகி மாவில் செய்யப்படும் களி, புட்டு, இடியாப்பம், லட்டு போன்ற அனைத்து உணவுகளையும் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் தினமும் உண்டு வந்தால், உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து, நோய் எதிர்ப்பு சக்தி உள்பட பல நல்ல பலன்களை நமக்குக் கொடுக்கிறது.
எனவே, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் இதை தினந்தோறும் உணவில் எடுத்துக்கொண்டால் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியத்துடனும் நலத்துடனும் வாழலாம்.