செய்திகள்

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் நாளை இயங்காது

சென்னை, நவ. 24–

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் நாளை (25–ந்தேதி) இயங்காது.

தீபாவளி பண்டிகையையொட்டி, விடுமுறையின்றி கடைகள் இயங்கியதால், நியாய விலைக் கடைகளுக்கு நாளை மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை தொடா்ச்சியாக விடுமுறையின்றி நியாய விலைக் கடைகள் அனைத்தும் இயங்கின. இதற்கு ஈடாக கடந்த 13ம் தேதி நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதேபோன்று நாளையும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி, தமிழகத்திலுள்ள நியாய விலைக் கடைகள் நாளை இயங்காது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *