செய்திகள்

இந்தியாவில் புதிதாக 164 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

டெல்லி, டிச. 12–

இந்தியாவில் புதிதாக 164 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1013 ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 122 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,03,341 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 21 ந்தேதி வெறுமனே 13 பேருக்கு மட்டுமே இந்தியாவில் கொரோனா கண்டறியப்பட்டது. அதேபோல், இந்தியா முழுவதும் சிகிச்சையில் இருந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 160–180 என்ற அளவிலேயே இருந்து வந்தது. ஆனால், 20 நாட்களில் கிடுகிடுவென உயர்ந்து நாளொன்றுக்கு 150 பேருக்கு மேல் தொற்று பரவி வருகிறது என்பதுடன் மொத்த எண்ணிக்கை 1000 என்ற அளவை கடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் 3 பேருக்கு தொற்று

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1013 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக 2 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், 36 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் எந்த மாநிலத்திலும் யாரும் உயிரிழக்காத நிலையில், இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,33,307 ஆக தொடருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 89 பேர் வீடு திரும்பிய நிலையில், இதுவரை மொத்தம் 4,44,69,021 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.68 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று இந்திய குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *