சென்னை, அக்.11-–
முன்னாள் எம்.எல்.ஏ. எம்.எல்.சி.களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.30 ஆயிரமாக வழங்க சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது,
தமிழக சட்டசபையில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-–
சட்டசபை மற்றும் சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு மாதமொன்றுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி இந்த ஆண்டு ஜூன் 1–-ந் தேதியில் இருந்து வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கு ஏற்றபடி தமிழ்நாடு சம்பளம் வழங்கல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது,
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.