செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி தடுமாற்றம்

Makkal Kural Official

பெர்த், நவ. 22–

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பெர்த் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இளம் வீரர் ஜெய்ஸ்வால் 2வது ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அதைத் தொடர்ந்து களம் இறங்கிய படிக்கல் 23 பந்துகளில் ரன் எதுவும் அடிக்காமல் வெளியேறி அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய விராட் கோலி 12 பந்துகளில் 5 ரன்கள் அடித்து அவுட்டாகி இந்திய ரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் மறுபுறும் நம்பிக்கையுடன் நிதானமாக ஆடிக்கொண்டிருந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் 74 பந்துகளில் 26 ரன்கள் அடித்த நிலையில் அவுட்டனார். அவரது அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறைந்த ரன்களிலேயே இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களம் இறங்கிய ரிஷப் பண்ட், துருவ் ஜுரல் நிதானமான ஆட்டத்தை தொடங்கினார். ஆனால் அந்த கூட்டணியும் நீடிக்கவில்லை. 11 ரன்களில் ஜுரல் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் களம் இறங்கிய வாசிங்டன் சுந்தரும் 4 ரன்களில் அவுட்டானார். பின்னர் களம் இறங்கிய நிதிஷ ரெட்டி ரிஷப் பண்டுடன் இணைந்தார்.

தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 41 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் அடித்திருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *