நாடும் நடப்பும்

மீன்வளத்துறையின் வளர்ச்சிக்கு ஸ்டாலின் தர இருக்கும் ஊக்கம்

ஆர். முத்துக்குமார் ஏப்ரல் வந்து விட்டால் மீன் வர்த்தகம் தமிழகத்தில் மிகமுக்கிய விவாத பொருளாக மாறி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. நடப்பு மத்திய பட்ஜெட்டில் ரூ.2,249 கோடியை ஒதுக்கீடு பெற்று இருந்தது. இது கடந்த ஆண்டை விட ரூ.600 கோடி அதிகமாகும். அதில் முக்கியமான ஓர் அம்சமும் இருக்கிறது. அது இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு திறன் மையங்கள் மீன்பிடி துறைக்கு உதவ இருக்கிறது. இதனால் மீன்பிடி மட்டுமின்றி மீன் சந்தைப்படுத்துதல் முறைகள் மேம்படப்போகிறது. பிளாக் செயின் தீர்வுகள் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

சரக்கு போக்குவரத்து செலவை குறைக்க மத்திய அரசு தீவிரம்

ஆர். முத்துக்குமார் நாம் சமீபமாக கச்சா எண்ணையை ஓரளவு குறைந்த விலையில் வாங்கி வருவது அறிந்ததே. ஆனால் நம்நாட்டில் போக்குவரத்து செலவுகள் குறைந்து விடவில்லை. மாறாக அதிகரித்துள்ளது. குறிப்பாக சரக்கு போக்குவரத்து செலவு 13 சதவிகித அளவில் தற்சமயம் இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா ஒத்துக்கொண்டிருக்கிறார். சரக்கு போக்குவரத்து கட்டணங்கள் உச்சத்தில் இருப்பதால் அன்றாட உபயோகப் பொருட்களின் விலையும் புதிய உச்சத்தில் தானே இருக்கிறது. இது நமது தயாரிப்பு துறைக்கு மிகப்பெரிய தலைவலியாகும்! இந்த சவாலை பிரதமர் […]

Loading

நாடும் நடப்பும்

திறமைசாலிகள் வழிகாட்டும் மகளிர் ஐபிஎல்

ஆர். முத்துக்குமார் கிரிக்கெட் உலகில் இந்தியா வலுவான அணியாக இருப்பதன் பின்னணி : லீக் கிரிக்கெட் முதல் ரஞ்சிக் கோப்பை போட்டிகள் என அடிமட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு ஆடுகளம் தயாராக இருப்பது தான்! பள்ளிப் பருவத்திலேயே சிறப்பாக ஆடும் திறன் பெற்றவர்களுக்கு தங்களது திறனை வெளிக்காட்ட வழிவகை இருப்பதால் பல நல்ல ஆட்டக்காரர்களை தொடர்ந்து நாடு பெற முடிகிறது. அது மட்டுமா? ஓரளவு ஓடி ஆடி விளையாட நல்ல ஆரோக்கியமான உடற்பயிற்சியும் ஆகவே இருக்கிறது! ஆண்களுக்கு பெண்கள் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இட்லிக்கு என ஒரு தினம்

நாடும் நடப்பும் உங்களுக்கு தெரியுமா? இன்று உலக இட்லி தினமாம்! 2015–ல் இருந்தே மார்ச் 30 இட்லி தினமாக கொண்டாடப்படுகிறது. உணவு நிபுணர்கள் இட்லியின் மகத்துவத்தை புகழ்ந்து தள்ளுகிறார்கள். அரிசியும், உளுந்தும் கலந்த மாவு என்பதால் போஷாக்கான உணவு என்றும் புரதம் அதிகம் கொண்ட உணவு என்றும் கூறுகிறார்கள். கூட சாம்பாரும், சட்னியும் மிளகு பொடியும் சேர்த்து சாப்பிட்டால் அதன் ருசிக்கு அடிமையாகாதவர் எவரும் இல்லை! கூடவே சத்தான ஆகாரமாக உயர்கிறது. பல நூற்றாண்டுகளாக தென் இந்தியாவின் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

வரி சுமையே!

ஆர்.முத்துக்குமார் நிதியாண்டு முடிவடையும் போது, அதாவது மார்ச் மாத இறுதி வந்து விட்டால், சாமானியனின் மனதில் வரியோ வரி என மன வலியுடன் வரி சுமையை குறைக்க வழிகளை தேடுவது வாடிக்கை! நேரடியாகச் செலுத்தும் நேர்முக வரியிலிருந்து தப்பித்தாலும், அவர்கள் வாங்கும் பொருள்கள் மீதான மறைமுக வரியை அவர்கள் செலுத்தவே செய்கிறார்கள். அரசு என்ற அமைப்பு உருவானபோதே வரியும் தோன்றிவிட்டது! வரிச் சேமிப்புக் கடமைகளை நிறைவேற்ற கடைசி நிமிட அவசரம் தேவையற்றது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் உங்கள் நிதி […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பாதுகாப்பான தேசமாக உயரும் இந்தியா

* ஆயுத இறக்குமதியில் முதலிடம் * அமைதியை நிலைநாட்ட தயார் நிலையில் ராணுவம் ஆர்.முத்துக்குமார் உலகெங்கும் போர் பதட்டம் அதிகரித்த வண்ணம் இருப்பதை பார்க்கும்போது, ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் தேவை அதிகரிப்பு காரணமாக அவர்களுக்கு வருவாய் அதிகரிப்பு மகிழ்ச்சிகரமாகவே இருக்கும். ஆனால் இந்தியாவின் நிலை மிக விசித்திரமானது. தலைப்பகுதியில் பாகிஸ்தானும், வால் பகுதியில் இலங்கையும் நமது உடன்பிறப்புகளாக பல நூற்றாண்டுகளாக இருந்தும் தற்போது பிரிந்து தங்களுக்கு என புது அடையாளத்துடன் உலக நாடுகளின் வரவேற்பை பெற்றுள்ளனர். அவர்களுடன் […]

Loading

நாடும் நடப்பும்

நாவினாற் சுட்ட வடு! காங்கிரஸ் கட்சிக்கு புது சவால்

ஆர். முத்துக்குமார் வயநாடு மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்டிருப்பதால், மக்களவை உறுப்பினர் பதவியை இழந்திருப்பது அரசியல் களத்தில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 2019–ம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி கர்நாடகத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, மோசடி வழக்குகளில் சிக்கி வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்ற தொழிலதிபர்கள் நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். சூரத் […]

Loading

நாடும் நடப்பும்

சேப்பாக்கத்தில் இந்திய அணியின் பரிதாப தோல்வி

ஆர். முத்துக்குமார் ஒரு நாள் போட்டிகளின் உலகக் கோப்பை இவ்வருடம் அக்டோபர் மாதத்தில் நடைபெற இருக்கிறது. அதில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? என்ற கேள்விக்கு பதில் சற்று கவலை தரும் விதமாகவே இருக்குமோ? என்ற அச்சக் கேள்வியை சமீபத்து ஆஸ்திரேலிய தொடர் தோல்வி சுட்டிக் காட்டுகிறது. 1–-1 என்று சமநிலையில் இருந்த தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன், ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே துவங்கியது. இந்திய மண்ணில் இந்தியாவை ஒரு […]

Loading

நாடும் நடப்பும்

பாகிஸ்தானில் அரசியல் பதட்டம், உலக அமைதிக்கு சவால்

ஆர். முத்துக்குமார் திகில் மர்மக் கதைகளில் அடுத்து என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் படிப்பது போல் பாகிஸ்தானில் நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது, அரசியலில் ஜனநாயகத்திற்கு வழியே இல்லையோ? என்ற குழப்பமும் நீடிக்கிறது. அத்துடன் பாக். ராணுவம் எல்லைப்புற தீவிரவாதத்தில் மூழ்கி இருப்பதால் தேர்தல் பணிகளில் பங்கேற்க முடியாது என்றும் சமீபத்தில் கூறி விட்டது! இந்த நெருக்கடிகள் மேலும் அதிகரித்தால் என்ன ஆகும்? கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் மிகப்பெரிய மழை […]

Loading

நாடும் நடப்பும்

‘பசுமை தமிழகம்’: உறுதி செய்ய வரும் ஸ்டாலினின் புதிய எத்தனால் கொள்கை

ஆர். முத்துக்குமார் உலகமே கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கு மிக தீர்க்கமான முடிவுகள் எடுக்க தயாராகி வருகிறது. பல நாடுகள் பல்வேறு திட்டங்களை அமுலுக்கு கொண்டு வரவும் துவங்கி விட்டது. கடந்த ஆண்டு இந்தியா பெட்ரோலுடன் 20% எத்தனாலை கலப்பது என்ற முடிவை எடுத்தது, அதன் காரணத்தின் பின்னணியில் வாகன கரும் புகை வெளியேற்றம் குறையும் என்பதாகும். வெறும் பெட்ரோல் நல்லது தான், ஆனால் 85% இறக்குமதி செய்யும் நம் நாட்டில் பெட்ரோலை மிக விலை உயர்ந்த பொருளாகவே […]

Loading