செய்திகள்

பொங்கல் திருநாளையொட்டி 3 ஆயிரம் போலீசாருக்கு முதலமைச்சர் பதக்கங்கள்: மு.க.ஸ்டாலின் உத்தரவு

தீயணைப்பு, சிறைத்துறையினருக்கும் பதக்கங்கள் சென்னை, ஜன.14– பொங்கல் திருநாளையொட்டி 3 ஆயிரத்து 184 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. இந்த […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 375 பேருக்கு கொரோனா: 2 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் 12 பேருக்கு தொற்று டெல்லி, ஜன.14– இந்தியாவில் புதிதாக 375 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3075 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 441 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 375 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் […]

Loading

செய்திகள்

கடுமையான பனி மூட்டம்: வட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

டெல்லியில் 9 விமானங்கள் திருப்பி விடப்பட்டன புதுடெல்லி, ஜன. 14– வடமாநிலங்களில் கடுமையான பனி மூட்டம் நிலவுவதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் விமான, ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தரையிறங்க முடியாததால், 9 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. வாட்டி வதைக்கும் குளிரால் மக்கள் நடுங்கி வருகிறார்கள். தலைநகர் டெல்லியில் காலை வேளையில் வெப்ப நிலை 3.6 டிகிரி செல்சியசுக்கும் கீழ் செல்வதால் கடுமையான குளிர் […]

Loading

செய்திகள்

சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா: முரசு கொட்டி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜன.14–- சென்னை சங்கமம்-−நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார். 18 இடங்களில் இந்த திருவிழா 4 நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையின் சார்பில், தமிழ் மண்ணின் கலைகளை களிப்போடு கொண்டாடும் வகையில், ‘சென்னை சங்கமம் -நம்ம ஊரு திருவிழா’ பொங்கல் பண்டிகையின்போது நடத்தப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான ‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ 17-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி, சென்னை […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.38 ஆயிரம் கோடி நிவாரணம் வேண்டும்

அமித்ஷாவிடம் தமிழக எம்.பி.க்கள் வற்புறுத்தல் புதுடெல்லி, ஜன.14- தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.37 ஆயிரத்து 907 கோடி நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தது. 27-ந்தேதிக்குள் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த மாதம் ஏற்பட்ட ‘மிக்ஜாம்’ புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை யால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

புற்றுநோய்கள் வராமல் தடுக்கும் பீட்ரூட்

நல்வாழ்வுச்சிந்தனை பீட்ரூட் ஜூஸ் மார்பக புற்றுநோய்களைத் தடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. பீட்ரூட்டில் பெட்டானின் இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அதே போல வாஷிங்டன் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய்களை தடுக்கும் திறன் கொண்டுள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது(7). பீட்ரூட் ஜூஸ் உடன் கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்ளும்போது, . ​​ரத்த புற்று நோயை எதிர்த்து போராடும் வல்லமை கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது. பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கேன்சர் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, […]

Loading

செய்திகள்

பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் 4.44 லட்சம் பேர் பயணம்

சென்னை, ஜன. 14– பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களுக்கு அரசு பேருந்துகளில் 4 லட்சத்து 44 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு இடங்களிலிருந்து சிறப்பு ரெயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த 12–ந்தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 4,706 சிறப்பு பேருந்துகளும், பிற இடங்களில் இருந்து 8,478 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. […]

Loading

செய்திகள்

தொழில் நுட்ப கோளாறு: சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு

சென்னை, ஜன. 14– தொழில் நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை விமான நிலையம் முதல் அண்ணா சாலை வழியாக விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.தற்போது குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் ஒற்றை பாதை மெட்ரோ ரெயில் சேவை மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

Loading

செய்திகள்

சீனப் பெருஞ்சுவர் மீது உலகின் மிக நீளமான ஓவியம்: கின்னஸ் சாதனை படைத்த பெண் ஓவியர்

பெய்ஜிங், ஜன. 13– குவோ ஃபெங் என்ற பெண் ஓவியர், சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கி வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார். யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவர், உலகின் 7 அதிசயங்களுள் முதன்மையானது. இடைவெளி இல்லாமல் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நீளம் கொண்ட சீன பெருஞ்வர், சான்காய்குவானில் இருந்து ஜியாயூகுவான் வரை இருக்கிறது. நீளமான ஓவியம் எந்திரங்கள் பயன்பாடு அறவே இல்லாத அந்த காலக்கட்டத்தில் முற்றிலும் மனிதர்கள் […]

Loading

செய்திகள்

8 ஆண்டுகளுக்கு முன் 29 பேருடன் மாயமான விமானப்படை விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு

புதுடெல்லி, ஜன.13- சென்னையில் இருந்து அந்தமானுக்கு 29 பேருடன் சென்றபோது மாயமான விமானப்படை விமானத்தின் பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஜுலை 22ம் தேதி சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானின் போர்ட் பிளேயர் நோக்கி இந்திய விமான படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக சரக்கு விமானம் புறப்பட்டது. விமானத்தில் 6 விமான ஊழியர்கள் மற்றும் விமானப்படை, கடற்படை, […]

Loading