செய்திகள்

சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை

சங்கரன்கோவில், ஜன. 14–

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டது. நாளை பொங்கல் விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.5000-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வழக்கமாக 5,000 கிலோ மல்லிகை பூ வரும் நிலையில், தற்போது 300 கிலோ மட்டுமே வந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ விளைச்சல் குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மல்லிகை பூ போலவே பிச்சி பூ, கனகாம்பரம் கிலோ ரூ.3,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *