செய்திகள்

சீனப் பெருஞ்சுவர் மீது உலகின் மிக நீளமான ஓவியம்: கின்னஸ் சாதனை படைத்த பெண் ஓவியர்

பெய்ஜிங், ஜன. 13– குவோ ஃபெங் என்ற பெண் ஓவியர், சீனப் பெருஞ்சுவரின் மேல் உலகின் மிக நீளமான ஓவியத்தை உருவாக்கி வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார். யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவர், உலகின் 7 அதிசயங்களுள் முதன்மையானது. இடைவெளி இல்லாமல் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நீளம் கொண்ட சீன பெருஞ்வர், சான்காய்குவானில் இருந்து ஜியாயூகுவான் வரை இருக்கிறது. நீளமான ஓவியம் எந்திரங்கள் பயன்பாடு அறவே இல்லாத அந்த காலக்கட்டத்தில் முற்றிலும் மனிதர்கள் […]

Loading

செய்திகள்

8 ஆண்டுகளுக்கு முன் 29 பேருடன் மாயமான விமானப்படை விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு

புதுடெல்லி, ஜன.13- சென்னையில் இருந்து அந்தமானுக்கு 29 பேருடன் சென்றபோது மாயமான விமானப்படை விமானத்தின் பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஜுலை 22ம் தேதி சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானின் போர்ட் பிளேயர் நோக்கி இந்திய விமான படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக சரக்கு விமானம் புறப்பட்டது. விமானத்தில் 6 விமான ஊழியர்கள் மற்றும் விமானப்படை, கடற்படை, […]

Loading

செய்திகள்

அரசு தொலைக்காட்சியின் நேரலையில் மயங்கி விழுந்து பலியான அரசு அதிகாரி

திருவனந்தபுரம், ஜன. 13– மலையான தூர்தர்சன் அரசு தொலைக்காட்சியின் நேரலையில் மயங்கி விழுந்த அரசு அதிகாரி பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய ஒன்றிய அரசின் பிரசார் பாரதி நிறுவனம் மூலமாக பல்வேறு மொழிகளில் தொலைகாட்சி சேனல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் படி, கேரளாவில் மலையாள மொழியில் இயங்கி வரும் தூர்தர்ஷன் சேனலில், விவசாயம் சார்ந்த நேரலை நிகழ்ச்சி ஓடிக்கொண்டு இருந்தது. உயிரிழந்த அரசு அதிகாரி இந்த நிகழ்ச்சியில், கேரள விவசாய பல்கலைக்கழகத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றி வரும் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

விவசாயத்துக்கு சேதம் ஏற்படுத்தும் பறவைகள், விலங்குகளை விரட்டும் சூரிய மின் சக்தி கருவி

மதுரை என்ஜினீயர் ஜெகதீஸ்வரன் – நண்பர்கள் கண்டுபிடிப்பு இயற்கை சீற்றங்களைபோல், யானை, பன்றி, ஆடு, மாடு மற்றும் பறவைகளால் ஏற்படும் சேதமும் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றன. கடந்த காலத்தைப்போல் இல்லாமல் தற்போது விவசாயமும் மற்ற துறைகளைப் போல் நவீனமயமாகி வருகிறது. விதை விதைப்பது, களையெடுப்பது, நாற்று நடுவது, அறுவடை செய்வதற்கு நவீன இயந்திரங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறையை இந்த இயந்திரங்கள் ஓரளவு ஈடு செய்தாலும் பயிர்களை விலங்குகள் பறவைகள் சேதப்படுத்துவதைத் தடுக்க நவீன […]

Loading

செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

மும்பை, ஜன. 13– இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 25-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. 2-வது போட்டி பிப்ரவரி 2 முதல் 6-ந்தேதி வரை விசாகப்பட்டினத்திலும், 3-வது போட்டி பிப்ரவரி 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை ராஜ்கோட்டிலும், 4-வது போட்டி பிப்ரவரி 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 441 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

தமிழ்நாட்டில் 11 பேருக்கு தொற்று டெல்லி, ஜன.13– இந்தியாவில் புதிதாக 441 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3238 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 609 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 441 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் […]

Loading

செய்திகள்

கடந்த ஆண்டு அதிக அளவில் காற்றுமாசு அடைந்த நகரங்கள்

டெல்லி, ஜன. 13– காற்று மாசுபாட்டில் முதலிடத்தில் மேகலயாவின் பைர்னிஹாட் நகரம் உள்ளதாக எரிசக்தி தூய்மை காற்றுக்கான ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மோசமான காற்று மாசுபாடு நிலவிய நகரங்களின் பட்டியலை, எரிசக்தி தூய்மை காற்றுக்கான ஆராய்ச்சி மையம் வெளியிட்டது. அதில் மேகாலயத்தின் பைர்னிஹாட் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, பீகாரின் பெகுசராய், உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா ஆகிய நகரங்கள் உள்ளன. 227 நகரங்களில் ஆய்வு இந்த ஆய்வுக்கு மொத்தம் இந்தியாவின் 227 நகரங்கள் […]

Loading

செய்திகள்

கெஜ்ரிவாலுக்கு 4 வது சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை

டெல்லி, ஜன. 13– டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜனவரி 18 ந்தேதி ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை 4 வது சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி மதுபான விநியோக கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை ஏற்கனவே கைது செய்துள்ளது. இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஏற்கனவே அனுப்பிய 3 சம்மன்களுக்கு அவர் ஆஜராகாத நிலையில் அவருக்கு 4 வது முறையாக சம்மன் […]

Loading

செய்திகள்

சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை, ஜன.13-– சென்னை தீவுத்திடலில் நேற்று முதல் 48–-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான 48–-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்து பார்வையிட்டார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரங்கை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முழு உடல் […]

Loading

செய்திகள்

20 ஆண்டு பணிபுரிந்த 113 டிரைவர்களுக்கு தங்கப்பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்

மேயர் ஆர்.பிரியா வழங்கினார் சென்னை, ஜன.13– சென்னை மாநகராட்சியில் 20 ஆண்டுகள் மாசற்று பணிபுரிந்துள்ள 113 ஓட்டுனர்களுக்கு மேயர் ஆர்.பிரியா தங்கப்பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை நேற்று ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். சென்னை மாநகராட்சியில் 20 ஆண்டுகள் மாசற்று பணிபுரிந்துள்ள ஓட்டுனர்களுக்கு இயந்திரப் பொறியியல் துறையின் சார்பில் அவர்களைக் கௌரவிக்கும் விதமாக சிறப்பு பரிசாக 4 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், பணிக்காலத்தின்போது வாகனத்தை விபத்தின்றி இயக்கியிருத்தல், […]

Loading