சென்னை, டிச. 22– 4 நாள்களுக்கு பிறகு சென்னை மற்றும் தூத்துக்குடி இடையே இன்று மீண்டும் ரெயில் சேவை தொடங்கி உள்ளது. தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிகப் பலத்த மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதிலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் ரெயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், இந்தப் பகுதிகளில் தொலை தூர ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சீரான ரெயில் சேவை தற்போது மழை நின்று […]