சென்னை, டிச.12- நாடாளுமன்ற தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ள காலகட்டத்தில் வரும் திருவிழா, பொதுத்தேர்வுகள் விவரங்களை தமிழ்நாடு அரசிடம் கேட்டுள்ளோம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:- கடந்த அக்டோபர் 27ந்தேதி முதல் கடந்த 9ந்தேதி வரையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தொடங்கி உள்ளது. வாக்காளர் […]