மகுரா, ஜன. 8–
வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், ஆளும் அவாமி லீக் கட்சி சார்பில் மகுரா-1 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், ஆளும் அவாமி லீக் கட்சி சார்பில் மகுரா-1 தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஷகிப் அல் ஹசன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காசி ரெசல் ஹூசனை விட 1,50,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் ஹுசைன் 45,993 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தார். தற்போது ஷகிப் அல் ஹசன் தேர்தலுக்காக கிரிக்கெட்டில் இருந்து விடுப்பு எடுத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட ஷகிப் அல் ஹசன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட்டில், ஷகிப் அல் ஹசன் கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடினார். இந்த உலகக் கோப்பையில் ஷகிப் அல் ஹசன் வங்கதேச அணியை வழிநடத்தினார். தற்போது எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ள ஷகிப் அல் ஹசன், சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்வாரா? அல்லது ஓய்வு பெறுவாரா என்பது தெரியவில்லை. ஆனால், அரசியலுக்கு வந்த பிறகும், ஷகிப் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவார் என்றும், இரண்டு பொறுப்புகளையும் ஏற்கத் தயாராக இருப்பதாக அவர் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தார்.
300 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு (நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே எண்ணும் பணி தொடங்கியது. தேர்தல் முடிவுகளில் அவாமி லீக் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தாலும், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் 200 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அக்கட்சி தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது.