செய்திகள்

பார்லிமெண்ட் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டி: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

சென்னை, பிப்.1–

பார்லிமெண்ட் தேர்தலில் கூட்டணி அமைத்து பாமக போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பா.ம.க. யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இன்று பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:-

மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் கடுமையாக உழைத்தால் வரும் மக்களை தேர்தலில் 10 இடங்களை நம்மால் வெல்ல முடியும். அதற்கு அடுத்த சட்டமன்ற தேர்தலில் 60-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல முடியும்.

பார்லிமெண்ட் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கடுமையான பணியை நீங்கள் பாருங்கள். கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டால் கூட நாம் குறைந்தது ஏழு இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். உங்களது விருப்பத்தின்படி தனித்து போட்டியிட தற்போது தயாராக இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *