செய்திகள்

வேலூரில் சிகிச்சை பெற்று வரும் தயாநிதி அழகிரியை பார்க்க சென்ற ஸ்டாலின்

ஸ்டாலின்–அழகிரி சேர்ந்து புகைப்படம்

வேலூர், மே 9–

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தயாநிதி அழகிரியை பார்க்க சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுடன், மு.க. அழகிரி நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் சகோதரர் மு.க. அழகிரி. இவருடைய மகன் துரை தயாநிதி உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதனைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு மார்ச் மாதம் அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை தொடர்கிறது. அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கடந்த மாதம் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற போது, முதலமைச்சர் ஸ்டாலின் துரை தயாநிதியை மருத்துவமனையில் சென்று நலம் விசாரித்தார்.

ஒன்றாக ஸ்டாலின்–அழகிரி

இந்நிலையில் துரை தயாநிதி சந்தித்து நலம் விசாரிக்க மீண்டும் 2 வது முறையாக நேற்று முதலமைச்சர் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வருகை புரிந்தார். துரை தயாநிதி உடல்நலம் குறித்து விசாரித்த முதலமைச்சர் அங்கு அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மருத்துவமனையில் துரை தயாநிதி உடன் இருந்த மு.க. அழகிரி, முதலமைச்சர் ஸ்டாலினுடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு புகைப்படம் எடுத்துக் கொண்டார் . நீண்ட ஆண்டுகளுக்குப் பின் இருவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்து கொண்டனர். இச்சம்பவம் திமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இப்புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *