பழனி, மார்ச் 23–
பழனி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை அலுவலகத்திற்கு இ-மெயிலில் மிரட்டல் வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ரெயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் மோப்ப நாய் உதவியுடன் பழனி ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்கின்றனர். பழனியில் பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ள நிலையில், வெடிகுண்டு மிரட்டலால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.