செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.840 உயர்வு

சென்னை, ஏப்.06–

சென்னையில் இன்று புதிய உச்சமாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.52,920 ஆக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

பணவீக்கம் மற்றும் சர்வதேச காரணிகளால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரலாற்றில் முதல் முறையாக மாா்ச் 28-ஆம் தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 50,000-ஐ தொட்டது. ஏப்ரல் 3 ஆம் தேதி தங்கத்தின் வரலாறு காணாத அளவில் உயர்ந்து ரூ.52,000 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

ரூ.840 உயர்வு

இந்த நிலையில், வியாழக்கிழமை மீண்டும் புதிய உச்சமாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.52,360-க்கும் விற்பனையான நிலையில் சென்னையில் இன்று மீண்டும் புதிய உச்சமாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.6,615-க்கும், பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.52,920-க்கும் விற்பனையாகிறது.

ஆனால் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.84.90-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.100 குறைந்து ரூ.84,900-க்கும் விற்பனையாகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *