சென்னை, ஏப்.06–
சென்னையில் இன்று புதிய உச்சமாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.52,920 ஆக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
பணவீக்கம் மற்றும் சர்வதேச காரணிகளால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரலாற்றில் முதல் முறையாக மாா்ச் 28-ஆம் தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 50,000-ஐ தொட்டது. ஏப்ரல் 3 ஆம் தேதி தங்கத்தின் வரலாறு காணாத அளவில் உயர்ந்து ரூ.52,000 என்ற புதிய உச்சத்தை தொட்டது.
ரூ.840 உயர்வு
இந்த நிலையில், வியாழக்கிழமை மீண்டும் புதிய உச்சமாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.52,360-க்கும் விற்பனையான நிலையில் சென்னையில் இன்று மீண்டும் புதிய உச்சமாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.6,615-க்கும், பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.52,920-க்கும் விற்பனையாகிறது.
ஆனால் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.84.90-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.100 குறைந்து ரூ.84,900-க்கும் விற்பனையாகிறது.