செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல்: சென்னை ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியுடன் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை

டெல்லி, ஜன. 20–

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான உயர்மட்டக்குழுவின் தலைவரான முன்னாள் குடியரசு தலைவலர் ராம்நாத் கோவிந்த், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

நாடாளுமன்றம் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஒன்றிய பா.ஜ.க. அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் எந்தளவுக்கு சாத்தியம் என்பது குறித்து ஆராய்வதற்காக, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைத்தது.

இக்குழுவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, முன்னாள் எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் கமிஷன் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் டாக்டர் சுபாஷ் சி காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

நீதிபதியுடன் ஆலோசனை

இவர்களில் எதிர்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குழுவில் பங்கேற்க மறுப்புத் தெரிவித்து விட்டார். இக்குழு இதுவரை 2 முறை கூடி ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியது. அதேபோல, அரசியல் கட்சிகள் மற்றும் புகழ்பெற்ற சட்ட வல்லுநர்களிடமிருந்தும் ஆலோசனைகள், கருத்துகள் கோரப்படுவதாக சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக, உயர்மட்டக் குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, இன்று டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோர்லா ரோகினி மற்றும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து ராம்நாத் கோவிந்த் கூறுகையில், ‘இந்த ஆலோசனை வரும் நாட்களிலும் தொடரும் என்று கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *