செய்திகள்

பெண்களுக்கு புத்தொழில் இயக்கம்

சென்னை, மார்ச் 20–

பெண்களுக்கென சிறப்பு புத்தொழில் இயக்கம் துவக்கப்படும் என்று சட்டசபையில் நிதி அமைச்சர் அறிவித்தார்.

சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:– இவ்வாண்டு, மகளிர்‌ சுயஉதவிக்‌ குழுக்களுக்கு, இதுவரை சுமார்‌ 24,712 கோடி ரூபாய்க்கு வங்கிக்‌ கடன்‌ வழங்கப்பட்டுள்ளது. வரும்‌ நிதியாண்டில்‌ 30 ஆயிரம் கோடி ரூபாய்‌ அளவிற்கு வங்கிக்‌ கடன்‌ வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெண்‌ தொழில்முனைவோர்கள்‌, தேவையான கடன்களை உரிய நேரத்தில்‌ பெறுவதிலும்‌, பொருட்களை சந்தைப்படுத்துவதிலும்‌, தொடர்ந்து இடர்பாடுகளை சந்திக்கின்றனர்‌. இச்சவால்களை எதிர்கொள்ள, பெண்களுக்கென சிறப்பு ‘புத்தொழில்‌ இயக்கம்‌’ ஒன்றை அரசு தொடங்கும்‌. பெண்‌ தொழில்முனைவோர்‌, புத்தொழில்களை தொடங்குவதற்கு அனைத்து வகையிலும்‌ இந்த இயக்கம்‌ உதவும்‌.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *